உச்சத்தை தொட்ட கொரோனா..!கேரளாவில் 2ஆம் நாளாக 30 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பு..!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,007 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.
கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 30,007 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கேரளாவில் 162 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,134 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 18,997 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,11,625 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கேரளாவில் தற்போது 1,81,209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 18.03 சதவீதமாக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!
June 25, 2025
400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!
June 25, 2025