இன்று முதல் தமிழகத்தில் ஏ.சி பேருந்துகள் இயக்கம்…!

இன்று முதல் தமிழகத்தில் அரசு போக்குவரத்தை சார்ந்த ஏ.சி பஸ்கள் இயக்கம்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 10 முதல் நிறுத்தப்பட்ட அரசு ஏ.சி பேருந்துகள் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, சென்னை மாநகரில் 48 குளிர்சாதன பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக 340 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏ.சி. பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முககவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு தான் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!
June 20, 2025