கோவை குற்றாலத்தில் இன்று முதல் அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

கோவை குற்றாலத்தில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் பெய்த தொடர் மழை மற்றும் பருவ மழை காரணமாக நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.குறிப்பாக, கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக,கடந்த அக்டோபர் 4 முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில்,கோவை குற்றாலத்தில் தற்போது நீர்வரத்து சீராக இருப்பதன் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி,இன்று முதல் காலை 9 மணி – மதியம் 2 மணி வரை நான்கு கட்டங்களாக 150 பேர் என்ற வீதத்தில் தினமும் 600 பேர் அனுமதிக்கப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், இதற்காக https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் முன்பதிவு பெறவேண்டும் என்றும் கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வனத்துறையின் இத்தகைய அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025