ரூ.7,500 கோடியில் சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

Default Image

ரூ.7500 கோடியில் சாலைகள் மேம்படுத்த நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதலமைச்சரின் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 255 கி.மீ நான்கு வழிச்சாலைகள் ரூ.2123 கோடியில் தரம் உயர்த்தப்படும். நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 96 கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூ.412 கோடியில் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளை பலப்படுத்தும் பணிக்கு ரூ.750 கோடியிலும், பாலங்கள் கட்டும் பணிக்கு ரூ.117 கோடியிலும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், மழை காலங்களில் தண்ணீர் தேங்காத வகையிலும், மழைநீர் வடிந்து செல்ல ஏதுவான வகையிலும் திட்டமிட்டு சாலைகள் அனைத்தும் மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்