அடுத்த 24 மணி நேரத்தில் காற்றாழ்த்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது..!

Default Image

இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அளவு உயரம். நிலநடுக்கோட்டை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சியால் 18, 19-இல் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இன்று முதல் 17-ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. நிலநடுக்கோட்டையொட்டி  இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தென்மேற்கு வங்கக் கடலில் பலத்த சூறாவளி வீசி வாய்ப்புள்ளது. இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் பலத்த சூறாவளி வீசி வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி வீசி வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கும் இன்றும்,நாளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam