இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி – இன்று கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்..!

Default Image

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இன்று அதிபர் கோத்தபய ராஜபக்ஷே தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது.

பொருளாதார நெருக்கடி 

அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலவாணி வரத்து குறைந்ததால், இலங்கை அரசு இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு பலமடங்கு அதிகரித்து இருப்பதால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வரும் தமிழ் மக்கள்..! 

அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களின் விலையும் கூட பல மடங்கு அதிகரித்துள்ளதால் மூன்று வேளை உணவு உண்பதற்கு கூட மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்களது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத சூழலில் மக்கள் பலர் அகதிகளாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் நேற்று மட்டும் 16 இலங்கை தமிழர்கள் இந்தியா வந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் பேட்டியளிக்கையில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இயலாத சூழ்நிலையாலும், குடும்ப வறுமையின் காரணமாகவும்  தங்கள் இந்தியாவிற்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

அனைத்து கட்சி கூட்டம்

இந்த நிலையில் இன்று அதிபர் கோத்தபய ராஜபக்ஷே தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் தற்போது நிலவக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இதனிடையே அனைத்துக்கட்சி கூட்டத்தில் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts