குழந்தைகள் முன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட 24 வயது பெண் ..!

டெல்லியில் சாகர்பூர் பகுதியில் வசித்து வரக்கூடிய 24 வயது பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், அந்த பெண் தனது குழந்தைகளுடன் வெளியில் சென்று கொண்டிருந்தபோது ஒருவர் கத்தியால் குத்தி அவரை கொலை செய்துள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணின் பெயர் ஆர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த பெண் உடல் தீன்தயாள் உபாத்யா மருத்துவமனையில் அனுப்பப்பட்ட போது, அவர்கள் இறந்து விட்டதாக உறுதி செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் மதியம் 2 மணியளவில் நடந்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும், உயிரிழந்த ஆர்த்தி எனும் பெண்ணை கொலை செய்த நபர் அவரது அண்டை வீட்டாராக ஒரு காலத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அண்டை வீட்டில் வசித்து வந்தவர் தான் வேறொரு இடத்திற்குக் குடி பெயர்ந்து உள்ளதாகவும், அவர் தான் இந்த கொலையை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025