#IPL2022: ஒரே ஓவரில் 3 விக்கெட்.. சென்னை அணிக்கு 174 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில்தற்பொழுது நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 49-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்ய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – டூ பிளேஸிஸ் களமிறங்கினார்கள். இவர்களின் தொடக்கம் அதிரடியாக இருந்தது.
இதில் 38 ரன்கள் அடித்து டூ பிளேஸிஸ் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் 3 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார். 30 ரன்கள் எடுத்து விராட் கோலி தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய பட்டிதார், சிறப்பாக ஆடி 21 ரன்கள் எடுத்தார். பின்னர் 18-ம் ஓவரை வீசிய தீக்ஷனா, லொம்ரோர், ஹசரங்கா, ஷாபாஸ் அஹமது ஆகிய மூவரின் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இறுதியாக பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி களமிறங்கவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025