கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? ஜோசியம் சொன்ன நாய்..! யார் அந்த முதல்வர்..?

Default Image

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் குமாரசாமி  என்று கணித்த பைரவா நாய்

கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சியில்  இருந்து வரும் நிலையில், பாஜகவினர் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அடுத்த முதல்வர் யார்?

kumarasamy

இந்த நிலையில் மாண்டியாவை சேர்ந்த கோபி என்பவர் பைரவா என்ற நாயை வளர்த்து வருகிறார். கால பைரவேஸ்வரரின் தீவிர பக்தரான இவர் சிறப்பு பூஜை செய்து மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்று அந்த நாயிடம் கேட்டுள்ளார்.

அப்போது முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகிய மூன்று பேர் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் குமாரசாமியின் புகைப்படத்தை வாயில் கவ்வியவாறு பைரவா என்ற நாய் வந்துள்ளது. இதனால் அடுத்த முதல்வர் குமாரசாமி  என்று அந்த நாய் கணித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts