மே 1 முதல் கலை கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம்!

artcollegeapplication

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம் விநியோகம்.

தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1 முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம் விநியோகம் என தகவல் வெளியாகியுள்ளது.

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 8ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், விண்ணப்ப விநியோகம் தொடர்பாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என தனியார் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின் உரிய மதிப்பெண் சான்றிதழ்களுடன், விண்ணப்பங்களை பதியேற்றம் செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 633 தனியார் கல்லூரிகள், 163 அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்