புனே குடோனில் பயங்கர தீ விபத்து…3 தொழிலாளர்கள் பலி.!!

வகோலியில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் வாகோலி பகுதியில் உள்ள அலங்காரப் பொருட்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11:43 மணியளவில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்ட குடோனில் ஒரு மணிமண்டபம் இருந்தது. அதுவும் தீப்பிடித்தது. மேலும் குடோனில் வைக்கப்பட்டிருந்த பல எல்பிஜி சிலிண்டர்கள் குடோனில் உடைந்ததை அடுத்து தீ அங்காங்கே பரவியது.
இந்த சம்பவம் அறிந்த புனே மாநகராட்சியின் தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களும், புனே பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎம்ஆர்டிஏ) 4 வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
குடோனின் அருகே 400 எல்பிஜி சிலிண்டர்கள் இருந்ததால், தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர் பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தனர். மேலும், இந்த தீவிபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | Maharashtra: Three people died after a fire broke out at a decoration material godown in Pune’s Wagholi area last night. Later the fire was brought under control. pic.twitter.com/aHpCWQXu0G
— ANI (@ANI) May 6, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025