உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

உப்பளத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று நல வாரியம் அமைத்து அரசாணை வெளியீடு.

tamilnadu government

உப்பளத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று நல வாரியம் அமைத்து அரசாணை வெளியீடு.

உப்பளத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றும் விதமாக, உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு இந்த தனி வாரியம் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், மற்ற நலவாரியங்களை போலவே உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திலும் இலவசமாக பதிவு செய்யலாம் என்றும் உப்பளத் தொழில் நல வாரிய உறுப்பினர்களும் இனி கல்வி உள்ளிட்ட அனைத்து உதவித் தொகையையும் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node