ஆஸ்திரேலியா அணி 270 ரன்கள் எடுத்து டிக்ளேர்..! இந்திய அணிக்கு இமாலய இலக்கு..!

ஆஸ்திரேலியா அணி 270 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 84.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தை டிக்ளெர் செய்துள்ளது.
கடைசியாக, கம்மின்ஸ் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா டிக்ளெர் செய்துள்ளது. இந்திய அணியை விட ஆஸ்திரேலியா 443 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து, 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் கில் களமிறங்கியுள்ளனர்.