அமெரிக்காவில் சிறுபான்மையினர் பற்றி செய்தியாளர்கள் கேள்வி.. பதில் கூறிய பிரதமர் மோடி.!

அமெரிக்காவில் சிறுபான்மையினர் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் கூறிய பிரதமர் மோடி.
அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு அரசு நிகழ்வுகில் கலந்துகொண்டு வருகிறார். நேற்று வாஷிங்க்டன் வெள்ளை மாளிகையில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் மற்றும் பிரதமர் மோடி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கு பதில் அளித்தனர். அப்போது செய்தியாளர்கள், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின், குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் பேச்சுச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கும் இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மோடி, ஜனநாயகம் எங்கள் DNA. ஜனநாயகம் எங்கள் ஆன்மா. ஜனநாயகம் எங்கள் நரம்புகளில் ஓடுகிறது. ஜனநாயக நாட்டில் நாங்கள் வாழ்கிறோம். மதம் அல்லது சாதியின் அடிப்படையில் இந்தியா எந்த வகையிலும் பாகுபாடு காட்டுவதில்லை. அனைவரையும் உள்ளடக்கியதே எங்கள் வளர்ச்சிக்கான உறுதிப்பாடு என பிரதமர் மோடி அமெரிக்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025