தேனி எம்பி ரவீந்திரநாத் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!

தேனி மக்களவை தொகுதியில் ரவீந்திரநாத் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவு.
தேனி மக்களவை தொகுதி தேர்தல் வழக்கில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் என ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பட்டிருந்த நிலையில், சில விளக்கங்களை கேட்டிருந்தார் நீதிபதி சுந்தர்.
இதனால் வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் ரவீந்திரநாத் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் கோரிக்கையியை ஏற்று வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி சுந்தர் ஒப்புதல் அளித்துள்ளார். தேனி மக்களவை தொகுதியில் ரவீந்திரநாத் பெற்ற வெற்றியை எதிர்த்து மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.