கனடா – இந்தியா இடையே போஸ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கனடா போஸ்ட் நிறுவனத்துடன் இந்தியா போஸ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துள்ளது. இ-காமர்ஸ் ஏற்றுமதியை எளிதாக்கும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச கண்காணிப்பு பாக்கெட் சேவையை (ஐடிபிஎஸ்) அறிமுகப்படுத்துவதற்காக சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக மின்னணு வர்த்தகத்தின் வாயிலான ஏற்றுமதியை எளிதாக்கும், ‘International Tracked Packet’ சேவையை 2 நாடுகளுக்கும் இடையே விரைவில் அறிமுகமாக உள்ளது. MSME வணிகத்தில் ஈடுபடும் இந்தியர்கள், தங்களின் பொருட்களை மிகவும் மலிவான கட்டணத்தில் கனடாவுக்கு ஏற்றுமதி செய்துகொள்ள முடியும் என அறியமுடிகிறது.

சிறு வணிகங்கள், வணிகர்கள் போன்ற இ-காமர்ஸ் ஏற்றுமதியாளர்களின் எல்லை தாண்டிய கப்பல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளூர் தபால் நிலையங்களைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்