பங்குச்சந்தை நிலவரம்..! சென்செக்ஸ் 65,218 புள்ளிகளாக வர்த்தகம்..!

sensex rise

இந்திய பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த 2 வாரங்களாகவே இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. முந்தைய வர்த்தக நாளில் சென்செக்ஸ் 65,000 புள்ளிகளைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது. அதே போல, இன்று மும்பை பங்குச்சந்தை மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 65,218 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, இன்றைய வர்த்தக நாளில் 65,503 புள்ளிகளாக தொடங்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் 13.25 புள்ளிகள் அல்லது 0.020% உயர்ந்து 65,218 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 1.90 புள்ளிகள் அல்லது 0.0098% குறைந்து 19,320 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,205 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,322 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸ் குறியீடு 65 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம் நடைபெற்று வருவதால் முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால் சென்செக்ஸ் குறியீட்டில் பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் நிறுவனம், மஹிந்திரா & மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஆக்சிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்