பாமக நிர்வாகி வெட்டி கொலை.! உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.!

செங்கல்பட்டில் கொலை செய்யப்பட்ட பாமக நிர்வாகி நாகராஜ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பாமக நகர செயலாளர் நாகராஜ் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் தாக்கப்பட்டதை கண்டதும், அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இந்த கொலை வழக்கு சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவுஸ் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர். ஏற்கனவே, அஜய் என்பவரை காவல்துறையினர் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.
இந்நிலையில் நாகராஜ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாகராஜ் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் உடன் பாமக கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வலியுறுத்தி வருகின்றனர்.