தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், இன்று சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. சைதாப்பேட்டை, கிண்டி, தேனாம்பேட்டை, தி.நகர், கோயம்பேடு, அசோக் பில்லர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துவது.
சென்னை நிலவரம்:
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.