தமிழ்நாட்டுக்கு 24,000 கன அடி நீர் திறக்க வேண்டும் – அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தமிழ்நாட்டுக்கு 24,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என இன்று நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறப்பது போதாது. தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 24,000 கன அடி நீர் கிடைத்தால் தான் நன்றாக இருக்கும். இது இன்று டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்றார்.
மேலும், தண்ணீர் குறைந்தால் விகிதாச்சார முறையில் தண்ணீரை பங்கிட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் கடமையை சரியாக நிறைவேற்றவில்லை எனவும் புகார் தெரிவித்தார். காவிரியில் நீர் குறைந்தால் எப்படி பங்கிடுவது என காவிரி மேலாண்மை ஆணையம் சரியாக வகுக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு 49 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்க வேண்டும். எனவே, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்தின் கோரிக்கையை வலுவாக எடுத்துரைக்கப்படும் எனவும் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025