தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்! எப்போது? ஏன்.?
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழகம் வருகை தருகிறார்.

திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழகம் வருகை தருகிறார்.
நவ.30ஆம் தேதி இந்த பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. அங்கு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியதோடு திரவுபதி முர்மு, சிறப்புரை ஆற்றுகிறார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ( CUTN ) திருவாரூரில் அமைந்துள்ள ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும். பேராசிரியர் எம். கிருஷ்ணன் இந்த மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார்.
முன்னதாக, இரண்டு நாள் பயணமாக கடந்த ஆண்டு தமிழகம் வந்த திரெளபதி முர்மு, சென்னை உத்தண்டியில் உள்ள கடல் சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவரின் தமிழகம் வருகையையொட்டி, திருவாரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தவுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025