ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு செய்தி கேட்டு வருத்தமுற்றேன்! இபிஎஸ் இரங்கல்!

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

eps evks elangovan

சென்னை :  காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

இதனையடுத்து, அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முதல்வர் ஸ்டலின்,  துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், செல்வப்பெருந்தகை, த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்திருந்தார்கள்.

அந்த வகையில், அவர்களை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில், கூறியதாவது ” தமிழ் நாடு காங்கிரஸ் மத்திய அமைச்சரும், ஈரோடு கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. E.V.K.S. இளங்கோவன் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்புச் சகோதரர் திரு. E.V.K.S. இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என வருத்தத்துடன் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services