“எங்களுக்கு விவாகரத்து வேணும்”…ஒரே காரில் நீதிமன்றம் வந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி!

விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி மனுத்தாக்கல் செய்தனர்,

GVP

சென்னை : சினிமாத்துறையில் விவாகரத்து செய்திகள் என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏற்கனவே, தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், டி இமான் ஆகியோர் விவாகரத்து செய்திகளை அறிவித்திருந்தார்கள். அவர்களை தொடர்ந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர்  மற்றும் பாடகி சைந்தவி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக கடந்த ஆண்டு மே மாதம் இருவரும் அறிக்கை வெளியீட்டு அறிவித்திருந்தார்கள்.

இதனை தொடர்ந்து இருவரும் பேசிக்கொள்ளாமல் இருக்கவில்லை பிரிந்தாலும் நண்பர்களாக இருப்போம் என அறிக்கையில் இருவரும் குறிப்பிட்ட படியே சேர்ந்து ஒன்றாக பாடல்கள் பாடுவது என நண்பர்களாக இருந்து வருகிறார்கள். சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெறும் போது கூட அங்கு சைந்தவி அழைக்கப்பட்டிருந்தார். ஜிவியுடன் இணைந்து பாடல்களை பாடிக்கொண்டிருந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருந்தது.

இந்த சூழலில் “எங்களுக்கு விவாகரத்து வேணும்” என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இருவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று ஒரே காரில் வந்த அவர்கள் இருவரும் நேரடியாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்று எங்கள் இருவருக்கும் விவாகரத்து வேண்டும் என கோரி அதற்கான மனுவை கொடுத்துவிட்டு வந்தபடி ஒரே காரில் சென்றார்கள். இருவரும் ஒன்றாக வந்து மனுதாக்கல் செய்த நிலையில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்