வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

அமெரிக்காவும் சீனாவும் அடுத்த 90 நாட்களுக்கு எந்த புதிய வரிகளையும் (இறக்குமதி வரிகள்) விதிக்க வேண்டாம் என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

America - China

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. உலகப் பொருளாதாரத்திற்கு தங்கள் இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து அமெரிக்காவும் சீனாவும் ஒரு உடன்பாட்டை எட்டியதாக இன்று ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் சனிக்கிழமை முதல் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தின. இது தொடர்பாக, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், இரு நாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு மட்டுமல்லாமல், தற்போதைய வரி அளவுகளில் குறிப்பிடத்தக்க குறைப்புக்கும் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

அதாவது, அடுத்த 90 நாட்களுக்கு எந்த புதிய வரிகளையும் (இறக்குமதி வரிகள்) விதிக்க வேண்டாம் என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதனுடன், தற்போதுள்ள கட்டணத்தைக் குறைப்பதற்கும் ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெசென்ட்டின் கூற்றுப்படி, கட்டணக் குறைப்புக்கள் பரஸ்பரம் இருக்கும், அமெரிக்கா மற்றும் சீனா ஒருவருக்கொருவர் விதித்த இறக்குமதி வரிகளை 90 நாட்களுக்கு மிகக் கூடுதல் அளவில் குறைக்க ஒப்பந்தம் செய்து உள்ளன.

இந்த 90 நாள் காலகட்டத்தில், அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை சீனா 125% இலிருந்து 10% ஆகக் குறைக்கும். சீனப் பொருட்களுக்கான வரிகளை அமெரிக்கா 145% இலிருந்து 30% ஆகக் குறைக்கும் என கூறப்படுகிறது. நேற்றைய தினம் (மே 11) சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை வெள்ளை மாளிகை அறிவித்தது. இருப்பினும், அதன் விவரங்கள் அப்போது வழங்கப்படவில்லை.

கடந்த மாதம், டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 145% வரி விதித்தார், அதற்கு ஈடாக சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரை வரி விதித்தது. இதன் காரணமாக, உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வருடாந்திர $600 பில்லியன் டாலர் வர்த்தகத்தை இந்த வரி கட்டணப் போர் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்