400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!
கடந்த வாரம் ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு 400 கிலோ யுரேனியம் இருப்பு காணாமல் போய்விட்டதாக அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் ஒப்புக்கொண்டார்.

அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது, பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி மிகவும் துல்லியமான தாக்குதலை நடத்தின. அதன்படி, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பகான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் பெரிய விளைவை ஏற்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு தகவலின்படி, அமெரிக்காவின் மிகப்பெரிய தாக்குதலில் ஈரானின் அணுசக்தி கட்டமைப்பு முற்றிலும் அழியவில்லை என நியூயார்க் டைம்ஸ், சிஎன்என் செய்தி கூறுகின்றது. உண்மையில், அமெரிக்க தாக்குதலில் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
மறுபக்கம், பென்டகன் (ஐக்கிய அமெரிக்க நாடுகளின் இராணுவத் தலைமை) புலனாய்வு அறிக்கை இதனை நிராகரித்துள்ளது. அதே நேரம், ஈரானின் அணுசக்தி மையங்களைத் தாக்கி அழித்து விட்டதாக அமெரிக்கா கூறியதை ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்தமும் அமலில் உள்ளது. இந்த நிலையில், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே போனது என தெரியவில்லை என்கிற தகவல் அமெரிக்காவையும் இஸ்ரேலைவும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஆம்.., அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு ஈரானின் 400 கிலோ யுரேனியம் ‘காணாமல் போய்விட்டது’ என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார். ஏபிசி செய்திக்கு பேட்டியளிக்கும் போது அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் இதை உறுதிப்படுத்தினார். மாயமான இந்த யுரேனியம் மூலம் 10 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என தெரிகிறது.
இது குறித்து பேசிய ஜே.டி. வான்ஸ் , ”400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்திலிருந்து குறைந்தது 10 அணு குண்டுகளையாவது தயாரிக்க முடியும். அறிக்கையின்படி, இந்த 400 கிலோ யுரேனியம் சுமார் 60 சதவீதம் வரை செறிவூட்டப்படுகிறது, மேலும் அணு குண்டு தயாரிக்க 90 சதவீதம் செறிவூட்டல் அவசியம். ஈரான் 3-4 வாரங்களில் 60 சதவீதத்திலிருந்து 90 சதவீதம் வரை யுரேனியத்தை செறிவூட்டியிருக்கும் என்று கூறப்பட்டது.
அதனால்தான் இஸ்ரேல் ஈரானைத் தாக்கியது. ஆனால், 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானில் உள்ள முக்கிய இடங்களில் சேமிக்கப்பட்டு, இப்போது அமெரிக்க தாக்குதலுக்கு முன்பு அது ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இருப்பினும், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள ஈரானிய அணுசக்தி தளங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார். இருந்தாலும், இது தொடர்பாக தன்னால் துல்லியமான தகவல்களை வழங்க முடியாது என்றும், அது குறித்து தனக்கு முழுமையாகத் தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மறுபக்கம், தாக்குதலுக்கு முன்னர் ஈரான், யுரேனியம் கையிருப்புகளையும் அதன் உபகரணங்களையும் ஒரு ரகசிய இடத்திற்கு நகர்த்தியிருக்கலாம் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் நியூயார்க் டைம்ஸிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, அமெரிக்க தாக்குதல்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், மலைக்குள் கட்டப்பட்ட ஃபோர்டோ அணுசக்தி நிலையத்திற்கு வெளியே 16 லாரிகள் கொண்ட செல்வதை காட்டியதாக சொல்லப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025