ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கியதில் இரு விமானிகள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்.

Rajasthan Flight Accident

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விமானம் விழுந்த இடத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டதாகவும், புகை மற்றும் தீப்பிழம்புகள் எழுந்ததாகவும் சாட்சிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த விமானம் இந்திய விமானப்படையின் முக்கிய போர் விமானங்களில் ஒன்றான ஜாகுவார் ஆகும். இது அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டு, பயிற்சி மற்றும் போர் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகிறது. விபத்து நடந்தபோது விமானம் வழக்கமான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும், விமானம் விழுந்ததற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரின் நிலை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை என்றாலும், மீட்பு குழுவினர் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமானப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்து குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த விபத்து இந்திய விமானப்படையில் ஜாகுவார் விமானங்கள் தொடர்பான மற்றொரு துயர சம்பவமாக பதிவாகியுள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விமானப்படை மற்றும் பிற தொடர்புடைய துறைகள் விரிவான விசாரணை மேற்கொள்ள உள்ளன. இதற்கிடையில்,  உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் விமானிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் வகையில், பலரும் சமூக  வலைதளங்களில் தங்கள் வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்