எகிறும் எதிர்பார்ப்பு! ஜூனில் அறிமுகமாகிறது பஜாஜ் ஆட்டோவின் முதல் CNG பைக்!

Published by
பாலா கலியமூர்த்தி

CNG Bike: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் CNG பைக்கை இந்திய சந்தையில் ஜூன் மாதத்தில் அறிமுக செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

ஆட்டோமொபைல் சந்தையில் பெட்ரோல், டீசல் கார்கள் மற்றும் பைக்குகளை தொடர்ந்து எலெக்ட்ரிக்  வாகனங்களும் அதிகரித்தே வருகிறது. இதில், சிஎன்ஜி எரிபொருள் கொண்டு இயங்கும் கார்களும் அடங்கும். இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம், அதன் முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யும் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் அறிவித்துள்ளார்.

இந்த சிஎன்ஜி எரிபொருள் கொண்டு இயங்கும் கார்களை தொடர்ந்து பைக்குகளும் தற்போது இந்திய சந்தையில் வெளியாக உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதுவும், முதல் முறையாக இந்தியாவில் அறிமுகமாகவுள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் CNG பைக் என்பது உலகிற்கே புதியவையாகும்.

அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயு தான் இந்த சிஎன்ஜி. இந்த எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களில் பெட்ரோல்/ டீசல் பயன்படுத்த தேவை இருக்காது. பஜாஜின் சிஎன்ஜி பைக்கின் காப்புரிமை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த பஜாஜ் சிஎன்ஜி பைக் ‘ப்ரூஸர் 125’ என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது ஒரு 125சிசி பைக்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மாடல் பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர் கொண்டு முன்புறத்தில் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் ஆப்ஷனும் உள்ள நிலையில், டிஜிட்டல் கிளஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை. எனவே, சிஎன்ஜி பைக் பெட்ரோல் மாடல்களை விட சிறப்பான மைலேஜ் வழங்கும் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் விலை ரூ.80,000இல் இருந்து எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Recent Posts

போதைப்பொருள் வழக்கு: ‘நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்’ – உயர் நீதிமன்றம்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…

13 minutes ago

ஜூலை 18-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.!

சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…

33 minutes ago

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் இதுவரை நடந்தது என்ன.?

கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…

48 minutes ago

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

1 hour ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

2 hours ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

3 hours ago