டீசல் வாகனங்களுக்கு தடை…2027-க்கு பிறகு இந்த வாகனங்கள் தான்!!

Published by
Muthu Kumar

டீசலில் இயங்கும் வாகனங்களை 2027ஆம் ஆண்டுக்குள் தடை செய்ய இந்திய அரசாங்கத்திற்கு எண்ணெய் அமைச்சகக் குழு பரிந்துரை.

இந்தியாவில் மாசுபட்ட நகரங்களில் மாசு உமிழ்வைக் குறைக்க, டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களை 2027ஆம் ஆண்டுக்குள் தடை செய்ய அரசுக்கு எண்ணெய் அமைச்சகக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு, டீசல் வாகனங்களைத் தடைசெய்து மின்சார மற்றும் எரிவாயு எரிபொருள் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

2030க்குள், மின்சாரம் இல்லாத நகரப் பேருந்துகள் எதுவும் இயக்கப்படக்கூடாது, 2024 முதல் நகரப் போக்குவரத்திற்கான டீசல் பேருந்துகள் இயக்கப்படக்கூடாது என்று எண்ணெய் அமைச்சகத்தின் குழு அறிக்கையில் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய சாலைகளில் எலக்ட்ரிக் வாகனங்களை பெருக்குவதற்காக, மின்சாரம் மற்றும் கலப்பின வாகனங்களின் விரைவான மாற்றத்திற்கு FAME திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகைகளை, மார்ச் 31 க்கு அப்பாலும் நீடிக்க அரசிற்கு குழு அறிவுறுத்தியுள்ளது.

மின்சார மற்றும் கலப்பின(எரிபொருள் மற்றும் கேஸ்) வாகனங்களை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2015இல் தேசிய எலக்ட்ரிக் மொபிலிட்டி மிஷனின் கீழ் நிதி உதவியை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. இந்தியாவில் போக்குவரத்துத் துறைகளில் டீசல் இன்னும் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.

2024 முதல் சரக்கு போக்குவரத்திற்காக ரயில்வே மற்றும் எரிவாயு(கேஸ்) மூலம் இயங்கும் லாரிகளை அதிக அளவில் பயன்படுத்த குழு பரிந்துரைத்தது. இந்தியாவில் நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் மின்சாரத்தால் இயக்கப்பட வேண்டும், எரிவாயுவை 10-15 ஆண்டுகளுக்கு மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்றும் அந்த குழு கூறியது.

Published by
Muthu Kumar

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

13 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

14 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

14 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

15 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago