14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு!

Published by
Edison

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி,அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இறக்குமதியை நிறுத்துமாறு முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதனை தொடர்ந்து, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

அதன்படி,தற்போது ரஷ்யாவிடமிருந்து இனி கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும்,ரஷ்யாவின் கச்சா எண்ணெய்,எரிவாயு ,நிலக்கரியை அமெரிக்க துறைமுகங்களில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வரை ரஷ்யாவிடமிருந்து நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை அமெரிக்கா இறக்குமதி செய்து வந்தது.மேலும்,நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில்,இனி ரஷ்யாவின் கச்சா எண்ணெய்,எரிவாயு ,நிலக்கரியை அமெரிக்க துறைமுகங்களில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.அதன்படி,ஒரு கேலன்(4.5லிட்டர்) பெட்ரோலின் விலை 4.173 டாலர்களாக அதிகரித்துள்ளன. மேலும்,அடுத்த சில நாட்களில் ஒரு கேலன் 5 டாலர்கள் வரை உயரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில்,தற்போது ஒரு கேலன்(4.5லிட்டர்) பெட்ரோலின் விலை 4.173 டாலர்களாக அதிகரித்துள்ளது.இதற்கு முன்னதாக ஜூலை 2008 இல், அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கேலன் 4.11 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

5 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

6 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

6 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

6 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

7 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

7 hours ago