வணிகம்

கடும் உச்சத்தில் தங்கம் விலை…இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

Published by
கெளதம்

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அதுபோல், கடந்த வாரம் தங்கம் விலை கடும் சரிவை கண்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், தீபாவளி முடிந்ததும் இந்த வார தொடக்க நாளில் இருந்து இன்று வரை தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், ஒரு சவரன் தங்கம் விலை நேற்று ரூ.44,920ஆக இருந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

அதன்படி, சென்னையில் (15.11.2023) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45.160க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,645க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.70 உயர்ந்து ரூ.77.70க்கும், கிலோ வெள்ளி ரூ. 77,700க்கும் விற்பனையாகிறது.

வாரத்தின் 3வது நாளில் ஏற்றமடைந்த சென்செக்ஸ்.! 24 நிறுவங்களின் பங்குகள் உயர்வு.!

(14.11.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.44,920க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,615க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

13 minutes ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

49 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

3 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

4 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

5 hours ago