Categories: வணிகம்

நான்காவது நாளில் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.! 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.!

Published by
செந்தில்குமார்

இந்திய பொருளாதாரம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கூட பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. இதில் சென்செக்ஸ் 200 முதல் 900 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகமானது. அதே போல நிஃப்டி 100 முதல் 200 புள்ளிகள் வரை சரிந்தது.

முந்தைய வாரங்களை போலவே இந்த வாரத்திலும் இந்தியப் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. இதனால் பல நிறுவனங்களின் பங்குகள் சரிவிலேயே இருந்தது, முதலீட்டாளர்களின் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. கடந்த வாரத்தில் ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.5 கோடிக்கும் மேல் இழந்துள்ளனர்.

வங்கி, நிதி மற்றும் உலோகப் பங்குகளின் பலவீனம், தடையற்ற வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போரும் பங்குச்சந்தை சரிவிற்கு காரணமாக உள்ளது.

ஆனால் முதலீட்டாளர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றமடைந்து வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, காலை 9.30 மணிக்குப் பிறகு மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 525.75 புள்ளிகள் உயர்ந்து 64,117.08 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 140.05 புள்ளிகள் உயர்ந்து 19,129.20 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 283.60 புள்ளிகள் சரிந்து 63,591.33  புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. மேலும், நிஃப்டி 90.45 புள்ளிகள் சரிந்து 18,989.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. 

முன்னதாக, சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது. உலகளாவிய எண்ணெய் பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.0100 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 87.42 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 10 அல்லது 0.15% குறைந்து ரூ.6,772 ஆக விற்பனையாகி வருகிறது.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 4 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் உள்ளது. சென்செக்ஸில் இண்டஸ் இண்ட் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடக் மஹிந்திரா பேங்க், என்டிபிசி லிமிடெட், சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.

ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல், நெஸ்லே இந்தியா மற்றும் டெக் மஹிந்திரா லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

8 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

9 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

9 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

10 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

11 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

11 hours ago