எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து சிறப்பாக விளையாடி வருவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டி பேசியுள்ளார்.

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படியான சூழலில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது இந்த தொடரில் இந்திய வீரர் ஜடேஜா தான் தங்களுடைய அணிக்கு தலைவலியாக இருப்பார் என தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இது குறித்தும் பேசும்போது ” ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சு, குறிப்பாக நான்காவது இன்னிங்ஸில், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கும். அவரது துல்லியமான லைன் மற்றும் லென்த், மைதானத்தின் தேய்மானத்தை பயன்படுத்தி, பேட்ஸ்மேன்களை திணறடிக்கும். எனவே, இந்த மாதிரி நேரத்தில் ஜடேஜாவை இங்கிலாந்து வீரர்கள் எதிர்கொள்ளும்போது மிகவும் தெளிவாக எதிர்கொள்ளவேண்டும்” என மைக்கேல் வாகன் தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து அவர் பேசுகையில் ” இங்கிலாந்து அணி தற்போது நிதானமாக விளையாடவில்லை அவர்களுடைய விளையாட்டை வைத்து பார்க்கும்போது அவர்கள் அதிரடியில் இறங்கி விளையாடுவது போல தோணுகிறது. ஏனென்றால், இங்கிலாந்து ஒரு ஓவருக்கு 4 ரன்கள் எடுத்து வருகிறார்கள். இந்திய அணிக்கு எதிராக இப்படி விளையாடுவது நல்ல விஷயம் தான் என்று நான் சொல்வேன். ஏனென்றால், அப்படி விளையாடினாலும் கூட அணியை நல்ல இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.
அதே சமயம், முதல் போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்து அணி 90 ஓவர்கள் பேட்டிங் செய்ய வேண்டிய சவால் உள்ளது. எனவே, இப்போது செல்வது போல விக்கெட் தொடர்ச்சியாக விடாமல் சரியாக விளையாடினார்கள் என்றால் போட்டியில், வெற்றி பெறுவதற்கு மிக நல்ல வாய்ப்பு உள்ளது” எனவும் மைக்கேல் வாகன் தெரிவித்தார். இவர் இப்படி பேசியிருப்பது இங்கிலாந்து வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு விஷயமாகவும் அமைந்துள்ளது.