INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் லேசான மழை காரணமாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை குறுக்கிட்டு விளையாட்டைத் தடை செய்தது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு 190 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆட்டம் உச்சகட்ட பரபரப்பில் இருந்தபோது, மழை பெய்யத் தொடங்கியது. இது ஆட்டத்தின் முடிவை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
மைதான ஊழியர்கள் உடனடியாக மைதானத்தை மூடுவதற்கு கவர் போர்த்தினர், மேலும் வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பினர்.
மழையின் தீவிரம் காரணமாக, ஆட்டம் நிறுத்தப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் முடிவை அறிய முடியாமல் காத்திருந்தன. ஏனென்றால், இந்தப் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இருப்பதால், முடிவு இரு அணிகளுக்கும் முக்கியமானது. இங்கிலாந்து அணி, இந்தியாவின் சவாலான இலக்கை துரத்துவதற்கு தங்களது முழு திறனையும் பயன்படுத்தி வந்தது. ஆனால், மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இங்கிலாந்து இருக்கும் நிலையில், ஒரு விக்கெட் மட்டுமே இழந்து சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தது. ஒரு பக்கம் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி சதம் விளாசி களத்தில் நிற்க (111*) மற்றோரு பக்கம் ஜாக் கிராலி சிறப்பாக விளையாடி 65 ரன்கள் அடித்துக்கொடுத்துவிட்டு சென்றார். அவருக்கு அடுத்தபடியாக வந்த ஓலி போப் நிதானமாக விளையாடி 8 ரன்களுடன் களத்தில் நிற்கிறார்.
போட்டி ரத்து ஆனது என்றால் யார் வெற்றி?
மழை காரணமாக இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி முழுவதுமாக தடைபட்டு, விளையாட முடியாமல் போனால், ICC விதிகளின்படி போட்டி டிராவாக (Draw) கருதப்படும். இது ஒரு நிலையான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) போட்டியாகும், எனவே ரிசர்வ் நாள் இல்லை. இதனால், இரு அணிகளும் டிராவிற்கு சமமான WTC புள்ளிகளைப் பெறும்.