Sensex [Representative Image]
இந்தியா என்பது வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இருந்தாலும் கூட அதன் சந்தைகள் அவ்வப்போது வீழ்ச்சியை சந்திக்கின்றன. அந்த வகையில் கடந்த வாரங்களில் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 900 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து வர்த்தகமானது. இதனால் ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ.5 கோடிக்கும் மேல் இழந்தனர்.
இதனை ஈடு செய்ய கடந்த சென்ற வர்த்தக நாளின் இறுதியில் பங்குச்சந்தை 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமானது. இது முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்ததோடு, சில நிறுவனங்களில் பங்குகளின் ஏற்றத்திற்கும் காரணமாக அமைந்தது. ஆனால் இந்த வாரத்தில் இரண்டாவது வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடனே வர்த்தகமாகி வந்தது.
அதன்படி, இன்று காலை நிலவரப்படி 64,449 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 180.00 புள்ளிகள் சரிந்து 63,932.65 புள்ளிகளாக வர்த்தகமானது. அதேபோல தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 28.00 புள்ளிகள் சரிந்து 19,112.90 புள்ளிகளாக வர்த்தகமானது.
தற்போது வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 237.72 புள்ளிகள் சரிந்து 63,874.93 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. மேலும், நிஃப்டி 61.30 புள்ளிகள் சரிந்து 19,079.60 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.92 டாலர் விலை உயர்ந்து 88.37 டாலராக விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 51.00 அல்லது 0.74% உயர்ந்து ரூ.6,931 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன
இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக. சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…