நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!
வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்ததாக FIR-ல் இருக்கும் நிலையில், அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையின்போது அவரை போலீசார் கடுமையாக பிரம்பால் தாக்கியதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், சீருடை அணியாத காவலர்கள் அஜித் குமாரை கம்பத்தில் கட்டி, கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
சிவகங்கையைச் சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞரை போலீசார் தாக்குவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் (FIR) அஜித் வலிப்பு நோயாலும், கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களாலும் இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.#AjithkumarMysteryDeath pic.twitter.com/KYLg19j9RQ
— patrikai.com (@Patrikaidotcom) July 1, 2025
ஆனால், காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் (FIR) அஜித் வலிப்பு நோயாலும், கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களாலும் இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வீடியோவை அஜித் குமாரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர், மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அஜித் குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், மற்றும் ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.