Categories: வணிகம்

ஐந்தாவது நாளாக சரிந்த சென்செக்ஸ்.! 2.15% வீழ்ச்சியில் மஹிந்திரா நிறுவன பங்குகள்.!

Published by
செந்தில்குமார்

கடந்த சில வாரங்களாக சரிவில் வர்த்தகமாகி வரும் இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, வாரத்தின் ஐந்தாவது நாளான இன்றும் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, சென்செக்ஸ் 176.76 புள்ளிகள் சரிந்து 64,655.44 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது. நிஃப்டி 45.85 புள்ளிகள் குறைந்து 19,352.10 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது.

இன்று காலை 64,756.11 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 198.72 புள்ளிகள் குறைந்து, 64,633.48 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 15.90 புள்ளிகள் குறைந்து 19,379.40 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

முந்தைய வர்த்தகநாளில் சென்செக்ஸ் 64,832.20 புள்ளிகளாவும், நிஃப்டி 19,395.30 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.40 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 80.41 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 27.00 அல்லது 0.42% குறைந்து ரூ.6,345 ஆக விற்பனையாகி வருகிறது.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 11 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது. அதன்படி, என்டிபிசி லிமிடெட் (+0.90%), டெக் மஹிந்திரா லிமிடெட் (+0.71%), பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் (+0.56%), ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் (+0.23%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க வகையில், நேற்று மஹிந்திரா நிறுவன பங்குகள் 4.43% ஆக இருந்தது. ஆனால் இன்றைய வர்த்தக நாளில் மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் பங்குகள் 2.15% சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (-2.15%), டைட்டன் கம்பெனி லிமிடெட் (-0.90%), ஏசியன் பெயிண்ட்ஸ் லிமிடெட் (-0.91%), இன்ஃபோசிஸ் லிமிடெட் (-0.60%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

11 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

11 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

14 hours ago