சூப்பர்…ஆன்லைனில் ரூ.100 க்கு தங்கம் வாங்கலாம் – நகைக்கடை விற்பனையாளர்களின் புதிய முயற்சி..!

Published by
Edison

இந்தியாவில் நகைக்கடை விற்பனையாளர்கள் ஆன்லைனில் குறைந்த பட்சமாக 100 ரூபாய்க்கு தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளனர்.

நாடு தழுவிய கொரோனா ஊரடங்குக்கு பிறகு தங்க நகை விற்பனையில் சரிவு ஏற்பட்டது.எனினும்,இது ஆன்லைன் தங்கம் விற்பனைக்கான இந்தியாவின் புதிய சந்தையில் ஒரு புதிய முயற்சிக்கு வழிவகுத்தது.

gold rate

அந்த வகையில்,டாடா குழுமத்தின் தனிஷ்க், கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா, பிசி ஜுவல்லர் மற்றும் செங்கோ கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் போன்ற தங்க நகை விற்பனையாளர்கள் தங்களுடைய அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நேரடியாகவோ அல்லது டிஜிட்டல் தங்க மேடைகளுடன் (digital gold platforms) டை-அப் மூலமாகவோ 100 ரூபாய்க்கு தங்கத்தை விற்பனை செய்வதற்கான சலுகைகளைத் தொடங்கியுள்ளனர்.அதன்படி,தங்கம் வாங்க விரும்பும் நுகர்வோர் குறைந்தபட்சம் 1 கிராம் தங்கத்திற்கு முதலீடு செய்தவுடன் அவர்கள் விரும்பினால் டெலிவரி செய்யப்படும்.

இந்தியாவிற்கு டிஜிட்டல் தங்க விற்பனை புதியதல்ல,ஏனெனில், ஏற்கனவே மொபைல் வாலட்கள் மற்றும் ஆக்மாண்ட் கோல்ட் ஃபார் ஆல் போன்ற தளங்கள்,உலக தங்க கவுன்சில் ஆதரவுடைய சேஃப் கோல்ட் தயாரிப்புகளை வழங்குகின்றன.ஆனால்,நகைக்கடை விற்பனையாளர்கள் மட்டும் இதுவரை தங்கம் போன்ற பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதிலிருந்து விலகி இருந்தனர்.

இந்த நிலையில்,இந்தியாவில் நகைக்கடை விற்பனையாளர்கள் ஆன்லைனில் குறைந்த பட்சமாக 100 ரூபாய்க்கு தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும்,இது தொடர்பாக,4,000 க்கும் மேற்பட்ட நகைக்கடைகளை பங்குதாரர்களாகக் கொண்ட ஆக்மாண்ட் கோல்ட்டின் இயக்குனர் கேதன் கோத்தாரி கூறுகையில்:”கொரோனா, வெளிப்படையாக, நிறைய நகைக்கடைக்காரர்களின் மனநிலையை மாற்றியுள்ளது, மேலும் அவர்கள் ஆன்லைனில் நகைகளை விற்பனை செய்வதில் முனைப்புடன் உள்ளனர். எனவே இது முழு மனநிலையின் அடுத்த கட்ட முயற்சியாகும்”,என்று கூறினார்.

தங்கத்தின் தேவை உச்சத்தில் இருக்கும் பண்டிகை காலம் தொடங்கும் போதே நகைக்கடைக்காரர்கள் இந்த சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.இணையம் வழியாக வாங்குவதற்கு அதிகமான இந்தியர்கள் ஆர்வமாக இருப்பதால் டிஜிட்டல் கொள்முதல் அதிகரித்து வருகிறது.

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago