சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது இந்த டேட்டிங் விவகாரத்தை அவரே ஊதி பெரிது படுத்தியுள்ளார் போல் தெரிகிறது, அட ஆமாங்க… இதற்கெல்லாம் காரணம் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான். நடிகர் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிறது. சமந்தாவும் நாக சைதன்யாவும் அக்டோபர் 2021-இல் பரஸ்பர விவாகரத்து பெறுவதாக சமூக ஊடகம் வாயிலாக அறிவித்தனர். அதன் […]
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் “ராயன்” படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இப்போது, இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று திரைக்கு வரும என்று படக்குழு அறிவித்துள்ளனர். அஜித்தின் ‘விடாமுயற்சி’யுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அஜித் மற்றும் தனுஷ் இடையேயான முதல் பாக்ஸ் ஆபிஸ் மோதலை தவிர்ப்பதற்காக ‘இட்லி கடை’ திரைப்படம் […]
புதுச்சேரி : பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவராக இருக்கும் பாடகர் உதித் நாராயணன் ரசிகர்களை முகம் சுழிக்க வைக்கும் வகையில் செய்த செயல் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. அப்படி அவர் என்ன செய்தார் என்றால், தன்னுடன் செல்பி எடுக்க வந்த பெண்களுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தது தான். புதுச்சேரியில் அவருடைய இசை நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பல பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டிருந்த உதித் […]
சென்னை : இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளில் முன்னணியில் பிரியங்கா சோப்ரா தான் இருக்கிறார். தமிழ் சினிமாவில் நயன்தாரா அதிகம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார் என்றால் இந்திய சினிமாவில் பிரியங்கா சோப்ரா என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். குறிப்பாக, சமீபத்தில் கூட அவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.40 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது அவர் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க கேட்ட […]
சென்னை : சிவாஜி நடிப்பில் 1952ம் ஆண்டு வெளியான “பராசக்தி” திரைப்படம், 72 வருடங்களை கடந்தாலும் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகும் படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புடன் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. ஆனால், அந்த டைட்டில் தன்னுடையது என விஜய் ஆண்டனி சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவரின் படத் தலைப்பு ‘PARAASHAKTHI’ என்ற வார்த்தையில் […]
சென்னை : நடிகர் விஜய் அவருடைய கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி முழுவதுமாக அரசியல் பயணத்தில் ஈடுபடவிருக்கிறார். எனவே, அவருடைய கடைசி திரைப்படம் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக நிலவியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டிலுடன் இரண்டு லுக் போஸ்ட்டர்கள் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் இரண்டாம் லுக் போஸ்டரில் விஜய் கையில் சட்டை ஒன்றை வைத்து கொண்டு இருந்தார். அதில் நான் ஆணையிட்டால் என்ற வசனமும் […]
சென்னை : கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 படம் வசூல் ரீதியாக இந்திய சினிமாவில் எளிதில் மறந்துவிடமுடியாத சம்பவம் ஒன்றை செய்திருந்தது. 450 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு பல கோடிகளை லாபம் கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த இந்திய படம் என்ற சாதனையையும் படைத்ததது. அதன்படி, ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்திய தகவலின்படி, இப்படம் உலகளவில் ரூ.1,799 கோடி வரை […]
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK25’ திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக “பராசக்தி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் தலைப்பை அறிவிக்கும் வகையில், டைட்டில் டீசர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. டைட்டில் டீசரை வைத்து பார்க்கும் பொழுது, ஸ்ரீலீலாவும் அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு கேரக்டரில் நடிக்கிறார். மறுபுறம், சிவகார்த்திகேயனின் பயங்கரமான எதிரியாக ரவி மோகன் நடிப்பதாக தெரிகிறது. மேலும், டீசர் பழைய […]
சென்னை : நடிகர் ரவி மோகனின் 34வது படத்தின் தலைப்பையும், டைட்டில் ரீவீல் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு தற்போது ” காரத்தே பாபு” என்று பெயரிடப்பட்டுள்ளது. டீசரில் தமிழ்நாடு சட்டமன்றம் போன்ற அமைப்பு இடம்பெற்றுள்ளது. இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையின் தற்போதைய காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ஷங்கர் ஜிவாலின் மகளும், நடிகருமான தவ்தி ஜிவால் இந்த படத்தில் […]
சென்னை : இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிக்கும் ‘SK 25′ திரைப்படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அறிவிக்கும் வகையில் படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில், புரட்சி யாருக்காகவும் காத்திருப்பதில்லை.. நாளையே புரட்சியை தொடங்குவோம். என்று சிவகார்த்திகேயன் தீ பாட்டிலை கொளுத்தும் படி, ப்ரீ-லுக்கை வெளிட்டுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் நடிகர் […]
சென்னை : நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘நானும் ரவுடிதான்’ காட்சிகளை பயன்படுத்தியற்கு ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்திருந்தது. முன்னதாக, நெட்பிளிக்ஸ் தரப்பில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என அறிவுறுத்தி மனு மீதான விசாரணை கடந்த ஜன.22ம் தேதி அன்று நடைபெற்றது. அப்பொழுது, இரு தரப்பு […]
சென்னை : வசூல் மழை என்றால் என்னவென்று நான் பாடம் தருகிறேன் என்கிற வகையில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 படம் வசூலில் சம்பவம் செய்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். 450 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு பல கோடிகளை லாபம் கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த இந்திய படம் என்ற சாதனையையும் படைத்ததது. அதன்படி, ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்திய […]
சென்னை : தனது அடுத்த மூன்று படங்கள் குறித்த அறிவிப்புகள் தனது பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகுமென எக்ஸ் தளத்தில் சிலம்பரசன் அறிவித்துள்ளார். நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில், தனது பிறந்தநாள் அன்று மூன்று படங்கள் வெளியவதாக அறிவித்திருக்கிறார். ஒன்று அவர் இயக்கும் திரைபடம்கும், மற்றொன்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் திரைப்படம். மேலும், இயக்குநர் தேசிங் பெரியசாமியுடன் இணைந்து ‘STR 49’ என்ற […]
மும்பை: நடிகர் சயீப் அலிகான் கத்திக்குத்து வழக்கில் சிசிடிவியில் பதிவான நபரை ஒத்த அடையாளத்துடன் இருந்ததால் கைது செய்யப்பட்டு, பின்னர் சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்ட ஆகாஷ் கனோஜியா வேதனை தெரிவித்துள்ளார். மர்ம நபரால் கத்தி குத்து சம்பவத்துக்கு ஆளான பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான். இதில் சைஃப் அலிகானுக்கு […]
சென்னை : இயக்குநர் மகிழ்திருமேனி தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இயக்குநர் மகிழ்திருமேனி சமூக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் விஜய்க்கு சொன்ன கதை பற்றியும் விஜய்யுடன் அவர் இணைந்து பணியாற்ற […]
சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மிஷ்கின் பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. விழாவில் பேசிய மிஷ்கின் “நான் ஒரு குடிகாரன்..எனக்கு மிகப்பெரிய போதை இளையராஜா..இளையராஜா ஒன்று ஒருத்தன் இருக்கிறான். நான் குடித்து விட்டால் அவர் தான் சைடிஸ். அவர் தான் பலரும் குடிக்க காரணம் எனவும் சில கெட்ட வார்த்தைகளையும் மேடையில் பேசினார். மிஷ்கின் பொது மேடையில் இப்படி […]
கொச்சி : விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தினை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இன்னும் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை தொடங்காமல் உள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்கிற வகையில் லைக்கா தற்போது இரண்டு படங்களின் ப்ரோமோஷன்களை ஒரே நிகழ்ச்சியிலும் நடத்தியிருக்கிறது. அதாவது, லைக்கா விடாமுயற்சியை போல மலையாளத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் மோகன்லாளை வைத்து இயக்கியுள்ள எம்புரான் திரைப்படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கொச்சியில் […]
சென்னை : விஜயின் கடைசி திரைப்படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அரசியல் பயணத்தில் ஈடுபடுவதாகவும் இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் எனவும் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். எனவே, அவருடைய கடைசி படம் எந்த மாதிரி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துள்ளனர். முன்னதாகவே, விஜய் அரசியல் பயணத்தில் இறங்கவுள்ள காரணத்தால் கண்டிப்பாக கடைசி படத்தில் அரசியல் சார்ந்த விஷயங்கள் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டு கொண்டு இருந்தது. அதனை […]
சென்னை : விஜயின் கடைசி திரைப்படமான அவருடைய 69-வது படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் அரசியல் பயணத்தில் இறங்கவுள்ள காரணத்தால் கண்டிப்பாக கடைசி படத்தில் அரசியல் சார்ந்த விஷயங்கள் அதிகமாக இருக்கும் என முன்னதாகவே கூறப்பட்டிருந்தது. எச்.வினோத்தும் கொஞ்சம் அரசியல் படத்தில் இருக்கும் என கூறியிருந்தார். இதுவரை படத்தின் தலைப்பு என்னவென்று அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், இன்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு படத்தின் பெயர் என்னவென்பது குறித்து படக்குழு […]