இந்தியன் ரயில்வே பொதுத்துறை நிறுவனத்தில் 2017 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள்: 4690 பதிவு செய்யும் லிங்: https://goo.gl/et7igJ வேலை: அனைத்து விதமான வேலைகள் பதிவு செய்ய கடைசி நாள் : 29.10.2017
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்பூர் பகுதியில் அரசு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சம்பள உயர்வு,ஓய்வூதியம், பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை வலியிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இப்போராட்டத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கெடுத்து உள்ளனர்.
ரூ.196 கோடியில் ராமர் சிலை இதிகாச பாத்திரமான, ராமருக்கு, ரூ. 195 கோடியே 89லட்சம் செலவில் சுமார் 328 அடி உயரத்திற்கு சிலை அமைக்கஉத்தரப்பிரதேச பாஜக அரசு முடிவு செய்துள்ளது. ராமர் பிறந்தார் என்று கூறப்படும்- உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள இடத்திற்கு அருகே சரயூ ஆற்றங்கரையில் சிலை அமைகிறது. உத்தரப்பிரதேச பாஜக அரசின் சிலை அமைக்கும் முடிவுக்கு மோடி அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திருப்பதுடன், சிலை அமைப்பதற்கான முழுச்செலவையும் ஏற்று, உடனடியாக ரூ. 133 […]
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பிஜேபி கட்சி அலுவலகத்தை கேரளா மாநில காவல்துறை மற்றும் வெடிகுண்டு துப்பறியும் குழு நடத்திய சோதனையில் கத்தி,அருவா,வாள் மற்றும் வெடிகுண்டு போன்ற கொடூரமான ஆயுதங்களும் கிடைத்துள்ளன… பிஜேபி கட்சியின் அலுவலகத்திற்குள் எப்படி இந்த ஆயுதங்கள் வந்தன என்பது குறித்து கேரளா காவல்துறை தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.நேற்றிற்கு முன்தினம் கேரளாவை ஆளும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய அமைதி பேரணியில் நாட்டு வெடிகுண்டு விசப்பட்டது. இதனால் பலர் படுகாயம் அடைந்தனர். கடந்த வாரம் […]
குஜராத் சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் பிரசாரத்தை இப்போதே தொடங்கிவிட்டார் ராகுல். இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் முக்கியமான வர்த்தக நகரான வடோதராவில் (பரோடா) நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அப்போது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. காரணம், அவர் செல்லுமிடங்களில் எல்லாம், தனது குடும்பமானது தீவிரவாதத்துக்கு பலியாகியிருக்கிறது என்று எப்போதும் […]
மூத்த பத்திரிகையாளர, எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரபல ரவுடிக்கும், அவருடைய கூட்டாளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சிறப்பு விசாரணை குழுவினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. பெங்களூரூவில் பெண் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கவுரி லங்கேசை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்து கொலையாளிகளை பிடிக்க சிறப்பு விசாரணைக்குழு […]
நேற்று காலை குஜராத்தில் உள்ள தனது சொந்த ஊரான வாட் நகரில் தொல்லியல் துறை நடத்திக்கொண்டிருக்கிற அகழாய்வுப்பணியை பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்பின் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ”வாட்நகரின் பழைய பெயர் ஆனந்தபூர். இங்கு அகழாய்வு செய்யவேண்டும் என்று நான் கூறினேன். அதனை மத்தியத் தொல்லியல் துறையினர் சிறப்பாக செய்துள்ளனர். இங்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு பெரியநகரம் இருந்திருக்கிறது. அது அழிந்துவிடாமல் தொடர்ந்து இருந்துள்ளது. இந்நகருக்கு சீனாவில் இருந்து யுவான்சுவாங் வந்துள்ளார். பெருமைகொண்ட […]
அருணாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த இராணுவ வீரர்களின் உடல்கள். சவப்பெட்டி கூட இல்லாமல் அட்டைப் பெட்டிகளில் அடக்கம் செய்திருக்கிறது மத்திய அரசு….. ராமருக்கு கோவில் கட்ட பல்லாயிரம் கோடி,சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்க 5000 கோடி,சத்திரபதி சிவாஜிக்கு சிலை அமைக்க 2500 கோடி,இந்து மத காவியங்களில் இருக்ககூடிய மரணமில்லா வாழ்வினை அளிக்ககூடியதாக கருதப்படுகிற புஷ்பாஞ்சலியை கண்டு பிடிக்க 85 கோடி ரூபாயை ஒதுக்கிருக்கிறது மத்திய பிஜேபி அரசு… ஆனால் நாட்டின் பாதுகாப்பு […]
“இனி ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டமாட்டேன்” என 50 முறை எழுதவைத்து அபராதமின்றி அனுப்பிய கேரள காவல்துறையினர்.
டெல்லியில் பட்டாசு வெடிப்பதினால் மாசு அதிகமாவதால் வரும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை என உச்சநீதிமன்றம் உத்தரவு விதித்துள்ளது.
ஊழலை ஒழிப்பதற்கே இரவு பகலாக பிரதமர் நரேந்திர மோடி பாடுபடுகிறார் என்று பாஜக-வினர் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். பாஜக தலைவர் அமித் ஷாவின் மகனும் தொழிலதிபருமான ஜெய் அமித் ஷா ஒரு மிகப்பெரிய ஊழலில் நீந்திக்கொண்டிருக்கக் கூடும் என்ற, தொழில்துறையினரையும் அசர வைக்கிற செய்தி இப்போது வெளி வந்திருக்கிறது.இணையதள ஏடாகிய ‘தி ஒயர்’ ஞாயிறன்று (அக்.8) வெளியிட்டுள்ள அந்தச் செய்தி எந்த அளவுக்கு அதிகார பலம் சுயநல நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. நரேந்திர மோடி […]
பொலீவிய நாட்டுக்கெதிராக புரட்சியைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு அவரைக் கைது செய்து ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் சிறை வைக்கின்றனர். அது ஒரு அசுத்தமான அறை. அறையின் ஒரு ஓரத்தில் படுக்க வைத்திருந்தார்கள். அவரது கைகள் பின்புறம் கட்டப்பட்டிருக்கின்றன. பரட்டைத் தலை. பிய்ந்து போன காலனிகள். அழுக்கேறிய உடைகள். அந்த அறைக்குள் நுழைகிறார் ஜீலியா கோர்ட்ஸ். இவர் அந்தப் பள்ளியின் ஆசிரியர். சங்கிலியால் கைகள் கட்டப்பட்டுப் படுத்துக் கிடந்த அவ்வீரன் சே குவேரா மெல்ல கண் திறக்கிறார். […]
07.10.2017 தில்லி ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று, போராடும் விவசாயிகளைச் சந்தித்தேன். சந்திக்க வேண்டுமென்று நேற்று ஓவியர் Elan Cheziyan செழியனிடம் பேசிக் கொண்டிருந்தேன். வழி குறித்து விசாரித்தபோது, ‘ மத்தியானம் சாப்பிட்டுட்டு… அப்புறம் போங்க’ என்று திரும்பத் திரும்பச் சொன்னார். ஏன் அப்படி வற்புறுத்திச் சொன்னார் என்பதை விவசாயிகளைச் சந்தித்த பிறகுதான் எனக்குப் புரிந்தது. விவசாயிகளைச் சந்தித்த பிறகு… சோற்றில் குற்றவுணர்வு இல்லாமல் கை வைக்க முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். நான் போனபோது […]
புதுச்சேரி :புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு இவ்வளவு நாள் துணை வேந்தர் இல்லாமல் செயல்பட்டு வந்தது.ஆனால் தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு நாளைக்குள் துணை வேந்தரை நியமிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நிரந்தர துணை வேந்தரை நியமிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிரந்தர துணை வேந்தரை நியமிக்கக் கோரிய பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
புதுடெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை செயலகத்தில் நடைபெற்ற டெல்லி கமிட்டியின் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லியின் பிரதேச காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதியாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற ஜி.எஸ்.டி வரியானது தொடர்ந்து இந்திய குடிமக்களை மேலும் பலவந்தமாக பொருளாதாரத்தில் மேலிருந்து கிழாக தள்ளி விடுகிறது என பல மாநில அரசுகள் மற்றும் எதிர் கட்சிகள் குற்றம்சாற்றி வருகின்றார்கள். இந்த வேளையில் தற்போது டீசல் எஞ்சின் உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி பொருட்கள், டீசன் எஞ்சின் உதிரிபாகங்கள், ஆயுர்வேத மருந்துகள் உள்ளிட்ட 26 வகையான பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.வரியை குறைத்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக தங்க […]
கணவன் கண்முன்னே மனைவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகர் அருகே உள்ள பெசரா கிராமத்துக்கு கணவன், மனைவி மற்றும் அவர்கள் 2 வயது மகன் ஆகியோர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையின் அருகே காரில் நின்ற 4 பேர்,அவர்கள் சென்று கொண்டிருந்த பைக்கை மறித்தனர். அருகிலுள்ள கங்கையாற்றின் பாலம் உடைந்துவிட்டது, வேறு வழியாகச் செல்லுங்கள் என்று அவர்களிடம் கூறியுள்ளனர். இதை நம்பி, அந்தக் குடும்பம் […]
டெல்லி :வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எதை சாப்பிட வேண்டும்,எதை குடிக்க வேண்டும் என முடிவு செய்வது அரசின் வேலை இல்லை என்று நிதிஆயோக்கின் தலைமை செயல்அலுவலர் அமிதாப் கந்த் தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி, மது தடை காரணமாக நாட்டின் சுற்றுலா துறை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
புதுடில்லி: உடல் நலக்குறைவால் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த 2 பாகிஸ்தானியர்களுக்கு சுஷ்மா விசா வழங்க உத்தரவிட்டுள்ளார்.பாராட்டு:மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சமூக வலை தளங்கள் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சிகிச்சைக்காக பல பாகிஸ்தானியர்கள் சிகிச்சைக்கு விசா கேட்டு டுவிட்டர் சுஷ்மாவிடம் உதவி பெற்றுள்ளனர்.இருதய அறுவை சிகிச்சை:இந்நிலையில் பாகிஸ்தானனில் லாகூரை சேர்ந்த உஜாயிர் ஹியுமாயூன் என்பவர், சுஷ்மாவின் டுவிட்டர் பக்கத்தில், […]
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள செக்யூரிட்டி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Chief Security Officer (Scale -IV) சம்பளம்: மாதம் ரூ.80,000 வயதுவரம்பு: 50 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும். தகுதி: முப்படைகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது காவல்துறையில் மாவட்ட காவல்துறை அதிகாரியாக பணியாற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: www.tmbnet.in […]