பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று தூய்மை இந்தியா சேவை இயக்கத்தில் இணைந்து அனுஷ்கா சர்மா போன்ற நடிகர்கள் சேவை செய்ததை அடுத்து அதில் இணைந்த மலையாள நடிகர் மோகன்லால், காந்தி ஜெயந்தி அன்று துடைப்பத்தை பிடித்து பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அக்டோபர் 2-ந் தேதியில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கினார். இதன்படி, நாட்டையும், வாழும் பகுதியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் பிராசரம் செய்யப்பட்டு […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில், மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பது குறித்த கையேட்டினை ஆசிரியர்களுக்கு முதல்முறையாக தமிழக அரசு வழங்க உள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல், பாடங்கள் நடத்தும்போது, இந்த கையேட்டின் அடிப்படையில், ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்த வேண்டும். இந்த கையேட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படி, ஒவ்வொரு பாடத்தையும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். வரலாறு, கணிதம், அறிவியல், ஆங்கிலம், தமிழ் என அனைத்து பாடங்களுக்கும் இந்த கையேடு தரப்படும். இது குறித்து […]
ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைத்துள்ளதால் 27 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார். மத்திய அரசு அனைத்து விதமான பரிவர்த்தனை மற்றும் ரேஷன் கார்டு, பான் கார்டு போன்றவற்றுடன் ஆதார் கார்டை இணைக்க உத்தரவிட்டிருந்தது. தற்போது வோட்டர் ஐடியுடனும் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணாக போலி அட்டைகள் கண்டு பிடிக்க முடியும் என மத்திய அறிவித்திருந்தது. டில்லியில் நிகழ்ச்சி […]
மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக, முக்கியமான துப்பு, சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு கிடைத்துள்ளதாகவும், கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்பதை கண்டறிந்துள்ளதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் (55) செப்டம்பர் 5-ஆம் தேதி பெங்களூருவில் அவரது வீட்டு வாசலிலேயே, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீட்டு சிசிடிவி-யில் 3 கொலையாளிகளின் படங்கள் பதிவாகி இருந்தன. ஆனால், அவர்கள் ஹெல்மெட்அணிந்திருந்ததால் உடனடியாக அடையாளம் காண […]
புதுடில்லி : நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்ததற்கு பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் தான் காரணம் என பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்கா கூறிக்க்கொண்டிருக்கிற போது, தேசிய அரசியலில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.இந்த சலசலப்பு அடங்குவதற்குள் பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சோரியும் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த ஆண்டு பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த […]
புதுடில்லி : இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.20 முதல் ரூ.40 வரை சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த நவம்பர் மாதம், பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதைதொடர்ந்து, இணையவழி பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த சேவை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஜூன் 30-ந் தேதிவரையும், பிறகு செப்டம்பர் 30-ந் தேதிவரையும் சேவை கட்டண விலக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், […]
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பூஞ்ச் மாவட்டம் திக்வாரின் நகர்கோட் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இது போன்று தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வழக்கமாகிவிட்டது, ஆனால் அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 34வது அகில இந்திய மாநாட்டு பொதுக்கூட்டம் ஹிசார்ல் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பல்வேறு மாநிலங்கலங்களை சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.திரிபுரா முதலமைச்சர் மாணிக்சர்க்கார் மாநாட்டினை வாழ்த்தியும் மற்றும் இன்றைய இந்தியாவில் விவசாயிகள் படும் துன்பங்கள் அனைத்துக்கும் ஆட்சியாளர்கள் தான் பொறுபேற்க வேண்டும் என்று உரையாற்றினார்.
புதுடில்லி: அமெரிக்காவிலிருந்து, முதல் கச்சா எண்ணெய் கப்பல், இன்று இந்தியா வந்தடைகிறது. நாட்டின் தேவையில் குறிப்பிட்ட பங்கை, அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி நிறைவு செய்வதால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.1975ல் தடைஅமெரிக்காவில் இருந்து இந்தியா, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, 1975ல் தடை விதிக்கப்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மத்திய கிழக்கு நாடுகளான, ஈரான், குவைத், சவுதி அரேபியா ஆகியவற்றிட மிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஜூனில், […]
தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க கேரளா மருத்துவமனைகள் மறுக்கின்றன. கேரள மருத்துவமனைகளில் தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. கடந்த மாதம் திருநெல்வேலியை சேர்ந்த முருகன் (30) என்பவர் கேரளாவில் கொல்லம் அருகே நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். அவருக்கு கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. சிகிச்சை கிடைக்காததால் அவர் உயிர் இழந்தார்.இந்த சம்பவத்திற்காக கேரளா இடது முன்னணி அரசின் முதல்வர் பகிரங்க மன்னிப்பும் தமிழர்களிடம் கேட்டார்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் […]
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிஎஸ்எப் முகாமிற்குள் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 3 வீரர்கள் காயமடைந்தனர். இந்திய வீரர்கள் திருப்பி தாக்கியதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். மோதல்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் அருகேயுள்ள பிஎஸ்எப் முகாம் உள்ளது. பலத்த பாதுகாப்புள்ள இங்கு, நுழைந்த பயங்கரவாதிகள், கன ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்த துவங்கினர். இதில் 4 வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்த இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி […]
முசாபர்நகர்: விஜயதசமியை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் கங்கை நதியில் புனித நீராட சாதுக்கள் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயதசமியை முன்னிட்டு புனித நதிகளில் சாதுக்கள் நீராடுவர். உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் கங்கை நதி பகுதியில் பல ஆசிரமங்களைச் சேர்ந்த சாதுக்கள் நீராட மறுத்துவிட்டனர். அப்பகுதியில் கங்கை நதியில் தொழிற்சாலை கழிவுகள் கலந்து கருப்பு நிறமாக மாறியிருந்தது. இதனால் சாதுக்கள் கங்கையில் நீராட மறுத்தனர். தற்போது முசாபர்நகர் நிர்வாகம் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.
டெல்லி: மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. நம் தேசப் பிதா மகாத்மா காந்தியின் 148வது பிறந்தநாள் இன்று. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு இன்று காலை சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளான இன்று அவருக்கும் அஞ்சலி செலுத்தினார் மோடி. இது குறித்து அவர் ட்விட்டரில் […]
தேசத்தின் மற்ற பகுதிகளுடன் காஷ்மீர் மக்கள் ஒன்றிணைவதற்கு அரசியல்சாசனத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்பதையே அவர் இவ்வாறு சூசகமாகத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அந்த அமைப்பின் வருடாந்திர தசரா விழா சனிக்கிழமை நடைபெற்றது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில் மோகன் பாகவத் […]
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் வருவதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருப்பதை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று கண்டு பிடித்தனர். ஜம்மு காஷ்மீரில் எல்லையை ஒட்டியுள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலமாக அந்நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்காக எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அர்னியா செக்டர் வழியே செல்லும் சர்வதேச எல்லையில் […]
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஸ்வைபிங் எந்திரம் மூலம், டெபிட், கிரெடிட் கார்டுகள் பண பரிமாற்றம் செய்வதை வலிந்து திணிப்பதன் மூலம் வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 3,800 கோடி இழப்பு ஏற்படும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே முதலீடு இல்லாமலும், வாராக்கடன்களாலும் தவித்து கொண்டு இருக்கும் வங்கிகளுக்கு கார்டுகள் மூலம் பணப்பரிமாற்றம் திட்டத்தை ஊக்கப்படுத்துவது மேலும் இழப்பில் கொண்டு போய் விடும். கள்ள நோட்டு, ஊழல், கருப்புபணத்தை […]
407-வது ஆண்டாக இந்த ஆண்டு வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது தசரா விழா. தேவி பராசக்தி சாமுண்டீஸ்வரியாக வடிவம் கொண்டு மகிஷனை சம்ஹாரம் செய்த இடமே மகிஷாபுரம், மஹிஷா மண்டலம், மஹிஷுர் என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டு பின்னர் மைசூர் என்று மருவியது. மகிஷ வதம் நடைபெற்ற இந்த இடத்திலேயே நவராத்திரி விழா நடைபெறுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பான பூஜைகளும் கொண்டாட்டங்களும் நடைபெற்ற மைசூருவில் இறுதி நாளான பத்தாம் நாள் விஜயதசமி தினத்தன்று ஜம்பூ […]
புதுடில்லி: ரயில் பயணிகள் பாதுகாப்பு தான் மிகவும் முக்கியம். பணம் பிரச்னையில்லை என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். ஆலோசனை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையின் புறநகர் பகுதியான, பரேலில் உள்ள எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலைய நடைபாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 23 பேர் பரிதாபமாக பலியாயினர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக மும்பையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அதிகாரிகளுடன் 9 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதிகாரம்: இந்த கூட்டத்தில் […]
அகர்தலா நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை பெற்றிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி, திரிபுரா மாநிலம் முதலிடத்தை பிடித்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தெரிவித்துள்ளார்.சர்வதேச கல்வியறிவு நாளையொட்டி திரிபுரமாநிலத் தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் பங்கேற்றார். அப்போது பேசிய மாணிக் சர்க்கார் நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை பெற்றிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி, திரிபுரா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது என்று […]
டெல்லி: 15 இந்தியர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த குவைத் அரசுக்கு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். 119 இந்தியர்களின் தண்டனை காலத்தையும் குவைத் அரசு குறைந்த்துள்ளது என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். ஆனால் இதற்கான முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டது கேரளா இடது முன்னணி முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் மட்டுமே. அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த காரியம் தன்னால் நடந்தது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.