மதுரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திமுக சார்பில் போராட்டம் நடத்திவருகின்றனர்.200க்கும் மேற்ப்பட்ட திமுக, கங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி சென்னையில் இன்றும் சுமார் 30 இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சென்னை முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தமிழகத்தில் முழு கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து 3 நாட்கள் போராட்டம் நடைபெற்றால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால் நீதிமன்றம் தானாக முன்வந்து தடை விதிக்க வேண்டும் என கேட்டிருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, போராட்டங்களுக்கு தடை விதிக்க […]
மேலூர்: அய்யாஊத்து கண்மாய் கொட்டாம்பட்டி யூனியன், சொக்கம்பட்டி ஊராட்சியில் உள்ளது . எம் சாண்ட் தயாரிக்கும் மணல் தொழிற்சாலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பாலம் அமைத்து சொக்கம்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் கிராமமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பாலம் நீர் நிலைகளை ஆக்கிரமித்து தொழிற்சாலைக்கு செல்வதற்கு இங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், விவசாயமும் அழிந்துவிடும் என்று கிராம மக்கள் குற்றம் […]
உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக அமைச்சருக்கு எதிராக மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தேனி மாவட்ட குரங்கணி காட்டுத்தீயில் படுகாயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தஞ்சையை சேர்ந்த சாய் வசுமதி இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதேபோல், காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்த சென்னையை சேர்ந்த நிவ்ய நிக்ருதி என்பவரும், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இதனால், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செய்வதை கண்டித்து மதுரையில் சாலை மறியல் போராட்டம் செய்த எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக,திக,விசிக,கம்யூனிஸ்ட்,நாம் தமிழர் போன்ற பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நுழைவதை கண்டித்தும், அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தலைவர்களின் கைதை கண்டித்தும் […]
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.செங்கோட்டை அருகே பாறைப்பட்டி என்ற பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் […]
ஒரத்தநாடு – தஞ்சை இடையே புதிய வழிதடத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட உத்தரவிடக்கோரி வழக்கு. விவசாயிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில் ரயில்வே துறை அதிகாரிகள் பதில் தர உத்தரவிட்டு விசாரணையை ஏப்.16க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
கிறிஸ்துவ வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதை கண்டித்து மதுரை ஆனையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,விடுதலை சிறுத்தைகள் கட்சி,திமுக,மதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டு பலர் பங்கெடுத்ததுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒரு கோயில் திருவிழாவை முன்னிட்டு முக்கம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 900 காளைகளும், 425 மாடுபிடி வீரர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் சிக்கி, அங்கு மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் சென்ற கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த சக்திகலா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அதேபோல், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி என்பவரும் சிகிச்சை பலனின்றி மாலை வேளையில் உயிரிழந்தார். இதனால், […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட புதுமண்டப கடைகளை பராமரிப்புக்காக திறக்க உயர்நீதிமன்ற கிளை அனுமதி. ஒரு வாரத்திற்குள் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், வியாபாரம் செய்வதற்கு அனுமதி இல்லை . மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து புதுமண்டபத்தில் 300 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் முக்கிய கோயில்களில் உள்ள கடைகளை அகற்றும் நடவடிக்கை மீதான இடைக்காலத்தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்துசமய அறநிலையத்துறை மார்ச் 20 ஆம் தேதிக்குள் பதில் […]
தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் டிரக்கிங் சென்றபோது குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, திருப்பூரை சேர்ந்த சக்திகலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதில் நேற்று வரை பலி எண்ணிக்கை 14ஆகவே இருந்தது.இந்நிலையில் சக்திகலாவைத்தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
குரங்கனி தீ விபத்தில் படுகாயம் அடைந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது கணவர் விபின் சம்பவதன்று உயிரிழந்தது குறிப்பிடதக்கது.
தமிழகத்தில் உள்ள தஞ்சை உட்பட 21 மாவட்டங்களில் தென்னை பயிரிட்ட விவசாயிகளுக்கு மழை பொய்த்து போனதன் காரணமாக வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி தமிழக தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கானது இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரனைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தது .
மதுரை மேலூரில் டிடிவி தினகரனின் புதிய கட்சிப்பெயர் அறிவிப்பு விழாவின் பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் சசிகலா தலைமையிலான அதிமுக (அம்மா) கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்…
மதுரை-அலங்காநல்லூர் அருகே உள்ள சிக்கந்தர்சாவடி, சதங்கை கலை மையம் அருகிலுள்ள சர்ச் மற்றும் கூடல்புதூர் பகுதியிலுள்ள இரண்டு சர்ச் களுக்கு ஞாயிறன்று ஐம்பது பேர் கொண்ட இந்துத்துவ வெறிக்கும்பல் ஒன்று சென்றுள்ளது. இனிமேல் நீங்கள் யாரும்சர்ச் நடத்தக்கூடாது. அடுத்த வாரம் சர்ச் நடத்தினால் உங்களை எல்லாம் இங்கிருந்து விரட்டியடிப்போம் என அந்தக்கும்பலில் இருந்தவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து சிக்கந்தர்சாவடி மந்தையம்மன் கோவில் தெரு பகுதியில் சர்ச் நடத்தி வரும் ரவிஜேக்கப் என்பவர் கூறுகையில், ஞாயிறு […]
தமிழகத்தில் உள்ள கண்மாய், குளங்களில் மீன் வளர்ப்பதற்கும், ஏலம் விடுவதில் தமிழக அரசால் வெளியிடபட்டுள்ள அரசாணையின் வழிமுறையானது முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு விசாரணையை வரும் மார்ச் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவுறுத்தல் செய்துள்ளார்.
மார்ச் 6,, 1790.- வரலாற்றில் இன்று. மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது – ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியாரின் நிர்வாகத்தில் பெரும்பான்மையான தமிழகம் இருந்தபோது அவர்கள்தான் நிர்வாக வசதிக்காக இதுபோல் மாவட்டங்களை உருவாக்கினார்கள். அவ்வாறே மதுரை மாவட்டமும் உருவாக்கப்பட்டது. இது தற்போது மதுரையை சுற்றியுள்ள திண்டுக்கல், தேனி, விருதுநகர்,ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போதைய மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி தவிர, 5 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், இந்த ஊராட்சி ஒன்றியங்களின் […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் ரவிச்சந்திரன். ராஜீவ் காந்தி கொலையில் 16வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட விருதுநகர் – அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரனுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. இவர் ராஜீவ்காந்தி கொலையில் குற்றவாளிகளுக்கு உதவியதாக குற்றம் சாற்றப்பட்டுள்ள்ளது. 26 ஆண்டுகள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்த ரவிச்சந்திரன் இன்று முதல் 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். தமது சொத்துக்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு […]