நாளை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் பிப்.1ஆம் தேதி முதல் (நாளை) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என […]
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் கூட்டணியில் போட்டியிடக்கூடிய கூட்டணி கட்சிகளுக்கான இட பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 4-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதற்கிடையில், சில கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றனர். இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் […]
பாரதிய ஜனதா கட்சி, தனியாக களம் இறங்குவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜக இடையே இடப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், அதிமுக கூட்டணி பாஜக இடம்பெறுமா அல்லது வெளியேறுமா என்று சந்தேகம் எழுந்தது. இந்த சமயத்தில் சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து […]
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை. தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுக்கான புதிய அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரையிலும் நடைபெறும் என்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் […]
பாஜகவுடன் கூட்டணி முறிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, சேலம் , ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இதுபோன்று, தேனி, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்ட நகராட்சி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, அரியலூர், நாகை, மயிலாடுதுறை […]
தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி என மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக – பாஜக இடையே உடன்பாடு ஏற்படாததால், தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதிமுக, பாஜக இடையே இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர் இழுப்பறி நீடித்து வந்தது. ஒட்டு மொத்தமாக 25 சதவீத இடங்கள் வரை பாஜக எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பாஜகவுக்கு […]
ராணிப்பேட்டை மாவட்டதிலுள்ள 8 பேரூராட்களில் போடியிடும் வேட்பாளர்கள் பெயரை வெளியிட்டது அதிமுக. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 பேரூராட்சிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக, இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என கூறப்பட்ட நிலையில், […]
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் விடுதியில் தங்கி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், 19ஆம் தேதி உயிரிழந்தார். மாணவி தற்கொலை விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மாணவியின் […]
சென்னை:தமிழகத்தில் தென் தமிழக மாவட்டங்கள் உள்ளிட்டசில இடங்களில் இன்றும்,நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னை […]
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், தற்போது அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் மதுரை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி தஞ்சையில் படித்து வந்த […]
விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்களிலே இணைய வழி பதிவு செய்யப்படும் என்று நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்களிலே இணைய வழி பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி,விஏஓ வழங்கும் அடங்கல் ஆவணம்,ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களை விவசாயிகள் சமர்பித்தால் இணைய வழியில் பதிவேற்றம் செய்து டோக்கன் வழங்கப்படும் எனவும் நுகர்பொருள் வாணிபக் கழகம் […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் 6-ஆவது பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து,தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில்,மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 5-வது பட்டியல் வரை கமல்ஹாசன் அவர்கள் முன்னதாக வெளியிட்டிருந்தார். இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் […]
தஞ்சை:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. எஸ்.சிங்காரவடிவேல் இன்று காலமானார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட கொரோனா பரவல்,தற்போது குறைந்து வருகின்றது.இதற்கிடையில்,அரசியல்,சினிமா பிரபலங்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அந்த வகையில்,கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி எஸ்.சிங்காரவடிவேல் அவர்கள்,தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில்,அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து,முன்னாள் எம்.பி எஸ்.சிங்காரவடிவேல் அவர்களின் மறைவுக்கு […]
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையினை எதிர்த்து திமுக அரசு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,இது மட்டுமல்லாமல் இதனை பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மத்திய […]
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான இடப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கூட்டணி, இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக ஈடுபட்டு வருகிறது. ஒருபுறம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கும் பணி தீவிரமடைந்துள்ளன. சென்னை மாநகராட்சியை பொறுத்தளவில் 200 வார்டுகள் உள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, மதிமுக 2, மனிதநேய […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக ரமேஷ் சென்னிதலா நியமனம். தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு கட்சிகள் கூட்டணி, இடப்பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் என தேர்தல் பணியில் தீவிரம்காட்டி வருகிறது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார் என்று வேணுகோபால் […]
தஞ்சை:பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை தொடங்கியது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். மேலும்,விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி,கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து,தஞ்சாவூரில் தங்கி படித்து வந்த அரியலூரை சார்ந்த பிளஸ் டூ மாணவி தற்கொலை […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,490 பேரூராட்சிகள் என,649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 22 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதன்காரணமாக, அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து […]
சென்னை:நாளை (பிப்ரவரி 1 ஆம் தேதி) முதல் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள கடற்கரைக்கு செல்ல நாளை (பிப்ரவரி 1 ஆம் தேதி) முதல் பொதுமக்களுக்கு அனுமதி என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.அதன்படி, மெரினா,பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு,நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டதன் காரணமாக,தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் போன்றவை […]
சென்னை:88-வது நாளாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால்,கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,88-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும், அதைப்போல், […]