சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் வகையில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா நான்கு கட்டங்களாக நடைபெற்று இன்று நிறைவடைந்தது. மாணவர்களின் கல்வி சாதனைகளை பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது. தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் […]
சென்னை : தவெக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் இறுதிகட்ட நிகழ்வில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்று பரிசுகளை வழங்கி வருகிறார். 4ஆம் கட்டமாக நடக்கும் நிகழ்வில் 39 தொகுதிக்குட்பட்ட மாணவர்களுக்கு விஜய் பரிசளித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். மாணவி ராஜேஸ்வரி, ஜே.இ.இ (JEE) அட்வான்ஸ்ட் தேர்வில் அகில இந்திய அளவில் 417-வது இடத்தைப் பிடித்து, சென்னை ஐ.ஐ.டி-யில் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார். இந்த ஆண்டு மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த விழாவின் முதல் கட்டம் மாமல்லபுரத்தில் மே 30 அன்று நடைபெற்றது, அங்கு 88 தொகுதிகளைச் சேர்ந்த 600 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக, ஜூன் 4 (இன்று) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் விழாவில், […]
சென்னை : நடிகர் விஜய் த.வெ.க கட்சியை தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் அதற்கான வேலைகளில் அவரும் கட்சி தொண்டர்களும் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கிடையில், விஜய் முழு நேர அரசியலில் இறங்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன, இது தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசியலுக்கு வந்தவுடன் எழுந்த விமர்சனங்களில் இதுவும் ஒன்று. பலரும் விஜய் எதாவது விவாகரத்துக்கு கண்டனம் தெரிவித்தால் முதலில் முழுவதுமாக அரசியல் களத்திற்கு வரட்டும் அதன்பிறகு பேசலாம் […]
சென்னை : தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, இன்று (ஜூன் 2, 2025) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கோடை விடுமுறையின் போது, மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குறிப்பாக, பல மாணவர்கள் விடுமுறையைப் […]
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று வருகிறது.10, 12-ம் வகுப்பில் சிறப்பான தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், ”உங்கள் குழந்தைகளின் விஷயத்தில் எதையும் கட்டாயப்படுத்தாதீர்கள். அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள். அவர்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அதன்படி வழிநடத்துங்கள் என்று பெற்றோருக்கு […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற உள்ளது. இந்த விழாவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஊக்கத்தொகை, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் கல்வி சாதனைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு சென்னை மாமல்லபுரத்தில் […]
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாக இதேபோன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் பாராட்டும் விழா, இன்று சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த விழா காலை 10 மணிக்கு […]
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. ரயில் மோதி இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர்கள் பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியை சேர்ந்த மமுகமது நஃபூல், சபீர் அகமது என தெரிய வந்துள்ளது. பின்னர், தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
உத்தரப் பிரதேசம்: வாரணாசியில் இன்று காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது பகுதி நடைபெற்றது. இதில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்த கொண்டனர். அப்பொழுது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி நிதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான், “நிதி நிலுவையில் இருப்பது எனக்கு நன்றாகவே […]
பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்காட்டில் உள்ள ‘பிரைம்’ சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் 19 மாணவர்கள் நாளை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை தொடங்கும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுக்கு அந்த தனியார் பள்ளியில் ஹால் டிக்கெட் வரவில்லை. நாளை தேர்வு தொடங்கும் நிலையில், ஹால்டிக்கெட் வராததால் பரிதவிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். சம்மந்தப்பட்ட பள்ளிக்கு 8ஆம் வகுப்பு வரை கூட அங்கீகாரம் […]
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர் மாவட்டத்திற்கும், உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (ஜன. 13ஆம் தேதி) பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இந்த 2 மாவட்டங்களுக்கு மட்டும் ஒருநாள் கூடுதல் விடுமுறை வருகிறது. இதன் மூலம், கடலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மட்டும் மொத்தம் […]
சென்னை: குமரிக்கடலில் நீடித்த தாழ்வு பகுதி லட்சதீவுகள் பகுதி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என டெல்டா வெதர் மென் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நேற்று முதல் தென் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை எதிரொலியாக இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்வதாலும், மழைநீர் சூழ்ந்து கிடப்பதாலும் மாணவர்கள் […]
சென்னை: இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இதன் காரணமாக, இன்று (டிச,13) மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர், 16ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழையும், 17ஆம் தேதி 3 மாவட்டங்களில் […]
சென்னை: ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளிகளிலும் வெள்ள நீர் இன்னும் வடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணாமாக, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் கடலூர், அண்ணா கிராமம், பண்ருட்டி ஆகிய 3 ஒன்றியங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா? […]
பங்களாதேஷ் : வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடித்ததால், இந்தியா, நேபாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லை வழியாக இந்திய பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். வங்கதேசத்தில் அரசு பதவிகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வங்கதேச விடுதலை வீரர்களின் சந்ததிகளுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பல இடங்களில் கலவரமாக மாறியுள்ளது, நேற்று மட்டும் 52 […]
சென்னை : 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் இன்று பரிசளிக்கிறார். தவெக சார்பில் 2வது ஆண்டாக நடைபெறும் இந்த கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க காலை முதலே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வருகை புரிந்து வருகிறார்கள். திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் முதல் கட்டமாக நடைபெறும் இந்த விழாவில் 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. […]
சென்னை: கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்தல் முடிவு மற்றும் வெப்பம் அதிகரிப்பு காரணமாக, ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான உடன் ஜூன் 6ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. ஆண்டுதோறும், தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து […]
10th Exam : தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில், 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், 7.72 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதுபோன்று, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி […]
Karnataka: கர்நாடகா மாநிலம் மங்களூருவில் தேர்வெழுத வந்த மாணவிகள் 3 பேர் மீது கேரளாவை சேர்ந்த அபின் என்பவர் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மங்களூரு நகருக்கு அருகில் உள்ள கடப்பாவில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது தெரிய வந்துள்ளது. READ MORE – பாஜக தேர்தல் நிதி! ரூ.2000 நன்கொடை வழங்கிய பிரதமர் மோடி கல்லூரியின் வளாகத்தில் பல்கலைகழகத்திற்கு முந்தைய பாடப்பிரிவு (பியுசி) தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த போது, இந்த […]