கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பாடநூல்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

School Reopen

சென்னை : தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, இன்று (ஜூன் 2, 2025) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கோடை விடுமுறையின் போது, மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குறிப்பாக, பல மாணவர்கள் விடுமுறையைப் பயன்படுத்தி பயிற்சி வகுப்புகள், குடும்ப பயணங்களில் பங்கேற்று மகிழ்ந்துள்ளனர். இதனால், மாணவர்கள் புதிய புத்துணர்ச்சியுடன் பள்ளிக்கு திரும்புவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான இன்று, மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாணவர்களின் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த பொருட்கள் உரிய நேரத்தில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

மேலும், புதிய கல்வியாண்டு தொடங்குவதால், மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகமாக இருக்கிறார்கள். பள்ளிகள் புதிய பாடங்களையும், மாணவர்களுக்கு புரியும்படியான புதிய கற்பித்தல் முறைகளையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்