த.வெ.க கல்வி விருது விழா: மணக்க மணக்க தயாராகும்தடபுடல் விருந்து..!
10, 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற 678 மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் பரிசுகள் வழங்குகிறார்.

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற உள்ளது. இந்த விழாவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஊக்கத்தொகை, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சி மாணவர்களின் கல்வி சாதனைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு சென்னை மாமல்லபுரத்தில் விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா தொடங்குகிறது.
முதல் கட்டமாக, 15 மாவட்டங்களில் 88 தொகுதிகளை சேர்ந்த 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த சுமார் 600 மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்படவுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி, அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மதியம் 21 வகையான உணவும் அளிக்கப்படுகிறது. விழாவில் சுமார் 2000 பேர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி, விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு 24 வகையான சைவ அறுசுவை விருந்து, பாதாம் கத்லி, ஸ்பிரிங் ரோல், காளான் பிரியாணி, தயிர் ரைத்தா, ருமாலி ரொட்டி, பால் பாயசம், ஐஸ்கிரீம் உள்ளிட்ட விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.