தமிழ்நாடு

#BREAKING: 21 மீனவர்களை உடனே விடுவித்திடுக – முதலமைச்சர் மு.க ஸ்டலின் கடிதம்!

இந்திய – இலங்கை மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உறுதியான நடவடிக்கை தேவை என முதலமைச்சர் கடிதம். இலங்கை கடற்படை கைது செய்த 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில் இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், இலங்கைக் கடற்படையினரால் […]

CM MK Stalin 5 Min Read
Default Image

நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!

நடிகர் விஜயின் காருக்கு நுழைவு வரி செலுத்த அபராதம் விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு. BMW காருக்கு தாமதமாக நுழைவு வரி செலுத்தியதற்கு அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் வழக்கு தொடுத்திருந்தார். 2021-ல் வணிகவரித்துறை உத்தரவை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து. தமிழக அரசு அவகாசம் கோரப்பட்டுள்ளதை அடுத்து வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2005-ல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு தாமதமாக நுழைவு செலுத்தப்பட்டதால் 400% […]

#ActorVijay 2 Min Read
Default Image

மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட்2022..! – கமலஹாசன்

நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த  நிலையில், மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத  #Budget2022 இது என கமலஹாசன் ட்வீட்.  நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் […]

#MNM 3 Min Read
Default Image

காவேரி கூக்குரல் இயக்கத்தின் வெற்றி இந்தியா முழுவதும் பரவ வேண்டும் – ஜூஹி சாவ்லா பெருமிதம்

காவேரி கூக்குரல் இயக்கத்தின் வெற்றி இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்று ஜூஹி சாவ்லா பெருமிதம். ”காவேரி கூக்குரல் இயக்கத்தின் முயற்சியால் 1,25,000 விவசாயிகள் மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாறி இருக்கின்றனர். அவர்களின் வருமானமும், விளைச்சலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மாபெரும் வெற்றி இந்தியா முழுவதும் பரவ வேண்டும்” என்று பாலிவுட் நடிகை திருமதி. ஜூஹி சாவ்லா தெரிவித்தார். காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் மரம்சார்ந்த விவசாயம் செய்து வரும் தமிழக விவசாயிகளை சந்திப்பதற்காக அவர் […]

cauvery kookural iyakkam 11 Min Read
Default Image

மொத்தத்தில் நாடு முன்னேற்ற பாதையில் செல்லும் வகையில் மத்திய பட்ஜெட் – ஈபிஎஸ்

குடைக்கான வரி உயர்வை ரத்துசெய்ய வேண்டும் என மத்திய பட்ஜெட் குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைத் துறை, 5 ஜி சேவை, 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது […]

#AIADMK 7 Min Read
Default Image

LIC நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம் மாநில அரசுகளின் வருவாயில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை மத்திய அரசு கைவிட வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை. 2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகள்  தொடங்கும் என பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து […]

#AMMK 7 Min Read
Default Image

தமிழக அரசின் இந்த முடிவு பெற்றோருக்கு மகிழ்ச்சியோ, மனநிறைவோ அளிக்கவில்லை – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு முரணாக அனைத்து வகுப்புகளையும் திறக்க அரசு அவசரம் காட்டுவது ஏன்? என அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் ஒரு மாதத்திற்கும் பின் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ்  ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் இன்று 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழக அரசின் இந்த முடிவு பெற்றோருக்கு மகிழ்ச்சியோ, மனநிறைவோ அளிக்கவில்லை. மாறாக அச்சத்தையும், பதற்றத்தையும் தான் ஏற்படுத்தியிருக்கிறது! […]

ANBUMANI 4 Min Read
Default Image

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : தேர்தல் பறக்கும் படையினரால் இத்தனை லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதா..? – மாநில தேர்தல் ஆணையம்

தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூ.53,72,001 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது, பிப்.19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான தீவிர முன்னேற்பாடு பணிகளில் அரசியல் காட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூ.53,72,001 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் […]

election2022 4 Min Read
Default Image

கேரள முதல்வருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர்…!

சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின்மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிடநடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வருக்கு கடிதம்.  சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின்மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் சேமிப்பை பராமரிக்கவும், சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன் […]

#MKStalin 5 Min Read
Default Image

“பசியை ஒழியுங்கள்,உண்மையை ஒழிக்காதீர்கள்” – எம்பி சு.வெங்கடேசன் காட்டம்!

மதுரை:குடியரசுத்தலைவர் தனது உரையில் அடுத்த 25 ஆண்டுகளில் புதிய அடித்தளம் போடுவதை பற்றி பேசுகிறார்.ஆனால்,கடந்த 75 ஆண்டுகளாக போடப்பட்ட அடித்தளத்தை அடித்து நொறுக்கிவிட்டு யாருக்காக போடப்படுகிறது புதிய அடித்தளம்? என்று எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 75 வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வேளையில்,அடுத்த 25 ஆண்டுகளில் புதிய அடித்தளம் போடுவதை பற்றி குடியரசுத்தலைவர் உரை பேசுகிறது.ஆனால், 75 ஆண்டுகளாக ஏற்கனவே போடப்பட்ட அடித்தளத்தை அடித்து நொறுக்கி விடுவோம் என்பதுதான் இதன் பொருளா என்று மதுரை எம்பி […]

Budget2022 10 Min Read
Default Image

மீனவர்களை கைது செய்வது அத்துமீறலின் உச்சமாகும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, சில வாரங்களுக்கு முன்னதாக 55 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, சமீபத்தில் தான் விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், மேலும் 21 மீனவர்களை […]

#PMK 5 Min Read
Default Image

“வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மணல் விலை இவ்வளவா?…திமுக அரசே,கட்டுப்படுத்த நடவடிக்கை எடு” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

கட்டுமானத்திற்கு தேவைப்படும் முக்கியப் பொருளான மணல் விலையை திமுக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் மணலின் விலையை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “கட்டுமானப் பொருள்களில் மிக முக்கியமானதாக விளங்கும் சிமெண்ட், கம்பி, செங்கல்,மணல்,மரம் போன்ற பொருள்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் […]

#AIADMK 6 Min Read
Default Image

இன்று முதல் பிப்.15-ஆம் தேதி வரை இவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடுகள் விதிப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட வரும் இன்று முதல் பிப்.15 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் கடந்த 28 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு நீக்கப்படுவதாகவும், கடந்த ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.மேலும்,பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள்,நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை எனவும் தெரிவித்திருந்தார். […]

#CMMKStalin 8 Min Read
Default Image

“இவர்கள் நமது தூதர்கள்…பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு”- அண்ணாமலை!

சென்னை,மதுரை,கோவை,ஒசூர் உள்ளிட்ட 14 மாநகராட்சிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக,பாஜக இடையே இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர் இழுப்பறி நீடித்து வந்தது.ஒட்டு மொத்தமாக 25 சதவீத இடங்கள் வரை பாஜக எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால்,பாஜகவுக்கு 4 அல்லது 5 சதவீத இடங்களை மட்டுமே அதிமுக ஒதுக்க முன்வந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.இதன்பின் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டு வருவதால்,பாஜக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் […]

#Annamalai 6 Min Read
Default Image

பெட்ரோல்,டீசல் விலை – இன்றைய நிலவரம் இதோ!

சென்னை:89-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால்,கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,89-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும், […]

#Petrol 3 Min Read
Default Image

#Breaking:பரபரப்பு…21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.கச்சத்தீவு அருகே இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நாகை மாவட்டத்தைத் சேர்த்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே,சில வாரங்களுக்கு முன்னதாக 40 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.இதனைத் தொடர்ந்து.அப்பகுதி மக்கள் […]

Arrested 3 Min Read
Default Image

மாணவர்கள் கவனத்திற்கு…இன்று முதல் பள்ளி,கல்லூரிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இன்று முதல் அனைத்து பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில்,நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர்  முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.பின்னர்,தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கிய நிலையில்,மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் இன்று (பிப்.1ஆம் தேதி) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் […]

coronavirus 5 Min Read
Default Image

சிங்கம் சிங்கிளாதான் வரும்! மேஜிக் சிம்பல் எங்களிடம் உள்ளது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

எங்கள் தலைமையில் சில கட்சிகளுடன் இணைந்து மக்களை சந்திக்க உள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இழுபறி நீடித்து வந்த நிலையில், கூட்டணியிலிருந்து பாஜக விலகியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் பாஜக தனித்து போட்டியிடும் என்றும் உள்ளட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து […]

#AIADMK 5 Min Read
Default Image

#BREAKING: 1,650 பறக்கும் படைகள் அமைப்பு – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. ஒரு மாநகராட்சி ஒரு […]

#Election Commission 6 Min Read
Default Image

#BREAKING: சென்னை மாநகராட்சி – வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தேமுதிக!

நகர்ப்புற உள்ளாட்சியில் சென்னை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் 100 வேட்பாளர்களின் பட்டியலை தேமுதிக வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது தேமுதிக. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் நிலையில், திருப்பூரை தொடர்ந்து சென்னைக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தேமுதிக திருப்பூர் மாநகராட்சியில் 24 வார்டுகளில் போட்டியிடும் […]

#DMDK 2 Min Read
Default Image