தமிழ்நாடு

ரூ.10,000 அபராதம்., 2 ஆண்டுகள் வழக்கு தொடர தடை! – உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு 2 ஆண்டுகள் பொதுநல வழக்கு தொடர தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும், லஞ்சம் வாங்க கூடாது என பெயர்ப்பலகை வைக்கவும் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். அதில், ஊழல் குற்றசாட்டுகளுக்குள்ளான அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது பொதுநல வழக்கு முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், […]

cctv camera 3 Min Read
Default Image

“இதன் நோக்கமே சிதைந்து விடும்” – அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சி!

சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசை சேவையை நிறுத்த பிரசார்பாரதி அமைப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில்,எந்த நோக்கத்திற்காக அவை தொடங்கப்பட்டதோ,அந்த நோக்கமே சிதைந்து விடும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை ‘ஏ’ அலைவரிசையை மட்டுமின்றி,இந்தியாவில் உள்ள எந்த மத்திய மற்றும் சிற்றலை ஒலிபரப்பையும் மூடும் திட்டத்தை பிரசார்பாரதி கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை ‘ஏ’ என்றழைக்கப்படும் சென்னை வானொலியின் […]

#PMK 6 Min Read
Default Image

அண்ணா நினைவு நாள் – சிறப்பு வழிபாடு, பொது விருந்துக்கு அனுமதி இல்லை!

அண்ணா நினைவு நாளையொட்டி வழிபாடு மற்றும் பொது விருந்து அனுமதி இல்லை என்று  இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அண்ணா நினைவு நாளையொட்டி வழிபாடு மற்றும் பொது விருந்து அனுமதி இல்லை என்று  இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதனால் கடந்த 26-ஆம் தேதி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் […]

#TNGovt 2 Min Read
Default Image

#Breaking:ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிரான வழக்கு வாபஸ்!

சென்னை:கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக் கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ். தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு  பிப்.1 முதல் பிப்.20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி முன்னதாக அறிவித்திருந்தார்.அதன்படி,நேற்று முதல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக் கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]

CASEWITHDRAW 3 Min Read
Default Image

நூல் விலை மேலும் உயர்வு.. பின்னலாடை வர்த்தகம் பாதிப்பு!

நூல் விலை கிலோவுக்கு மேலும் 10 ரூபாய் அதிகரித்துள்ளதால் திருப்பூர் பின்னலாடை தயாரிப்பாளர்கள் கவலை. நூல் விலை மேலும் உயர்ந்திருப்பதால் பின்னலாடை வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. நூல் விலை கிலோவுக்கு மேலும் 10 ரூபாய் அதிகரித்துள்ளதால் திருப்பூர் பின்னலாடை தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நூல் விலையை குறைக்க மத்திய நிதிநிலை அறிக்கையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதுதொடர்பாக எந்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது ஏமாற்றமாக அமைந்துள்ளது. மூலப்பொருள் உயர்வால் ஏற்கனவே ஜவுளிதுறையில் […]

Thread price hike 4 Min Read
Default Image

#Breaking:கோடநாடு வழக்கு:”மீண்டும் சிறைக்கே அனுப்புங்கள்” – வாளையார் மனோஜ் மனு!

உதகை:கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான வாளையார் மனோஜ்,தங்க இடமும்,உணவும் கிடைக்கவில்லை எனக் கூறி தனது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறைக்கே அனுப்புங்கள் என்று உதகை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் இரண்டாவது நபராக குற்றம் சாட்டப்பட்டவரான கேரளாவை சேர்ந்த வாளையார் மனோஜ்,கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்த நிலையில்,தற்போது தனது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறைக்கே அனுப்புங்கள் என்று உதகை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். முன்னதாக,உதகையில் […]

jail 3 Min Read
Default Image

#BREAKING: காவலர் தேர்விலும் ‘தமிழ் தகுதி தேர்வு’ கட்டாயம் – தேர்வாணையம் அறிவிப்பு

தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் காவலராக முடியும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு. காவல் பணிக்கான எழுத்து தேர்விலும் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் காவலராக முடியும் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சில அரசு ரீதியிலான தேர்வுகளுக்கு தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டியிருந்த நிலையில், தற்போது காவலர் பணிக்கான எழுத்து தேர்விலும் […]

#TNGovt 3 Min Read
Default Image

#BREAKING: சமூகநீதி கூட்டமைப்பு – 37 தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்!

சமூகநீதி கூட்டமைப்பில் இணையுமாறு 37 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு கூட்டணியில் இணையுமாறு ஓபிஎஸ் உள்பட 37 அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி, அதில் இணையுமாறு சோனியாகாந்தி, சரத் பவார், லாலு பிரசாத், பவன் கல்யாண், ஓவைசி, சந்திரபாபுநாயுடு, ஓபிஎஸ் உள்பட நாட்டில் உள்ள 37 அரசியல் […]

#CMMKStalin 6 Min Read
Default Image

#BREAKING: திமுகவின் 6-ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 6-ஆம் கட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 6ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செஞ்சி, அனந்தபுரம், மரக்காணம்,ஒரத்தநாடு, வல்லம், திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி, மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், தொரப்பாடி மற்றும் பெண்ணாடம் ஆகிய பேரூரராட்சிகளுக்கு திமுகவின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம், விருத்தாச்சலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக. மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் […]

#DMK 3 Min Read
Default Image

இனி வாக்குச்சாவடி முகவர்களுக்கு இவை கட்டாயம் – மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

வாக்குச்சாவடி முகவர்களுக்கு மத்திய,மாநில அரசின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு,வருகின்ற பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன்காரணமாக,அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில்,வாக்குச்சாவடி முகவர்கள் மாநில தேர்தல் […]

Central and State Governments 3 Min Read
Default Image

#Breaking:இல்லத்தரசிகளுக்கு ஓர் நல்வாய்ப்பு…தங்கம் விலை குறைவு!

சென்னை:இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து,ஒரு சவரன் ரூ.36,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக பெண்களை பொறுத்தவரை தங்களது முதலீடுகளை தங்கத்தில் செலுத்துவது வழக்கம்.ஏனெனில்,அது புத்திசாலித்தனமான முதலீடாக பார்க்கப்படுகிறது.ஆனால்,தங்கம் விலையை பொறுத்தவரை,நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமாக உள்ளது.அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து,ஒரு சவரன் ரூ.36,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,சென்னையில் 22 […]

22 carat jewellery 2 Min Read
Default Image

“வீடில்லாதவர்களுக்கு வீடு;சாத்தியமானவைகளை உள்ளடக்கிய பட்ஜெட்” -ஓபிஎஸ் வரவேற்பு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை,சாத்தியமானவைகளை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையாக உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்ட 2022-2023 ஆம் ஆண்டிற்கான மத்திய வரவு-செலவுத் திட்டத்தினை அதிமுக  சார்பில் வரவேற்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: அதிமுக சார்பில் வரவேற்பு: “மத்திய நிதி அமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 2022-2023 […]

#OPS 8 Min Read
Default Image

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று.!

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா உறுதியானது.  கொரோனா 3-வது அலையில் பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், சிகிச்சைக்கு பிறகு  அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா உறுதியானது. கொரோனா தொற்று பாதிப்பைத் தொடர்ந்து சரத்குமார் தன்னை தனிமை கொடுத்துக் கொண்டார். கடந்த ஒரு வார காலத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா தொற்று பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

#Sarathkumar 2 Min Read
Default Image

பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு முதல்முறையாக ஆன்லைனில் தொடங்கியது!

தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைனில் இன்று தொடங்கியுள்ளது. மருத்துவப்படிப்பில் சேர பொதுப்பிரிவு மாணவர்கள் கடந்த ஜனவரி 30 முதல் பிப்.1 ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த நிலையில் அதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. எம்.பி.பி.எஸ்,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கியது.அதன்படி,சிறப்பு பிரிவு மாணவர்கள், 7.5% உள்இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது. இந்நிலையில்,பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று காலை […]

#MBBS 4 Min Read
Default Image

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு…பிப்.28-க்குள் இதனை இணைக்க வேண்டும் – வெளியான முக்கியஅறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் பிப்.28-க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration – OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை 28.02.2022 ஆம் தேதிக்குள் தவறாமல் இணைக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக,டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: […]

#TNPSC 4 Min Read
Default Image

பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமா?-இன்றைய நிலவரம் என்ன?

சென்னை:90-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால்,கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,90-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், […]

diesel price 3 Min Read
Default Image

முதல் முறையாக பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடக்கம்!

பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று முதல் பிப்.5ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறுகிறது. மருத்துவப்படிப்பில் சேர பொதுப்பிரிவு மாணவர்கள் கடந்த ஜனவரி 30 முதல் பிப்.1 ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த நிலையில் அதற்கான கலந்தாய்வு  இன்று முதல் தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ்,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கியது.அதன்படி,சிறப்பு பிரிவு மாணவர்கள், 7.5% உள்இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது. இந்நிலையில்,பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு […]

#MBBS 3 Min Read
Default Image

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:இந்த பணிக்காக 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்- தேர்தல் ஆணையம் உத்தரவு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பார்வையாளர்களாக 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு,வருகின்ற பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து,அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்,சென்னை மாநகராட்சி உட்பட […]

IAS officers 3 Min Read
Default Image

இனிப்பும் கசப்பும் கலந்த கலவையாக மத்திய பட்ஜெட் உள்ளது – விஜயகாந்த்

மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. எனவே இனிப்பும் கசப்பும் கலந்த கலவையாக மத்திய பட்ஜெட் உள்ளது என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுகுறித்து அறிக்கை ஒன்றை […]

Budget 2022 3 Min Read
Default Image

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு […]

election2022 2 Min Read
Default Image