உலகம்

காதலரை கரம் பிடித்தார் நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா!

நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவுக்கும் ஆர்டனுக்கும் 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருமணம் ஏறக்குறைய ஐந்து வருடதிற்கு பிறகு இன்று (ஜனவரி 13) நடைபெற்றது. தலைநகர் வெலிங்டனில் இருந்து 325 கிமீ தொலைவில் உள்ள ஹாக்ஸ் பே பகுதியில் உள்ள சொகுசு திராட்சைத் தோட்டத்தில் இந்த திருமண விழா நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 முதல் கடந்த ஆண்டு ஜனவரி வரை முன்னாள் பிரதமர் ஜெசிந்தா பிரதம மந்திரியாக […]

Ardern Marries 3 Min Read
Ex New Zealand PM Jacinda married

அமெரிக்கவில் குளிர்கால புயலால் 2000 விமானங்கள் ரத்து!

அமெரிக்காவில் கடுமையான குளிர்கால புயல் காரணமாக 2,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த புயலால் பல இடங்களில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு 12 மாநிலங்களில் வணிகங்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை மொத்தம் 2,058 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றைய நிலவரப்படி 5,846 விமானங்கள் தாமதமாகிவிட்டதாக விமான கண்காணிப்பு இணையதளமான FlightAware தெரிவித்துள்ளது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் 401 விமானங்களுடன் ரத்து செய்யப்பட்ட பட்டியலில் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து 358  விமானங்களுடன் […]

3 Min Read
US airlines

பதற்றத்தின் உச்சத்தில் ஏமன்… மீண்டும் தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்கா!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு முதல் பல மாதங்களாகவே போர் நடைபெற்று வருகிறது. இதில், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். இதன் எதிரொலியாக மத்திய கிழக்கின் செங்கடல் பகுதி வழியாக செல்லும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், ஈரான் நாடு, ஹவுதி […]

#Attack 7 Min Read
yeman attack

அதிக விலை கொடுக்க தயாராகுங்கள்.. அமெரிக்கா, பிரிட்டனுக்கு ஹவுதி அமைப்பு கடும் எச்சரிக்கை!

கடந்தாண்டு செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஈரானிய ஆதரவுடன் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனால், செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல்கள் […]

#Attack 6 Min Read
Houthi organization

ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல்.!

செங்கக்கடல் தாக்குதலுக்கு பிறகு ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இரு நாடுகளும் இணைந்து தாக்குதல் நடத்துவதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கின் செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. ஏனென்றால், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க் கப்பல்கள் […]

#Attack 5 Min Read
US-UK attacks Houthi

உலக பாஸ்போர்ட் தரவரிசை.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.?

சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடும், மற்ற உலக நாடுகளில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல விசா பயன்பாடுகள் இன்றி பயணிக்கும் வசதியை கொண்டு அந்த நாட்டின் பாஸ்போர்ட் வலிமை கணக்கிடப்படும். அதாவது ஒரு நாடு எந்த நாட்டினரை விசா பயன்பாடுகள் இன்றி வரவேற்கிறது எனபதை பொறுத்து அந்த நாட்டின் பாஸ்போர்ட் வலிமை தெரியவரும். இந்த பாஸ்போர்ட் வலிமை தரவரிசை பட்டியலை சர்வதேச தரவு ஆராய்ச்சி அமைப்பான ஹென்லி அமைப்பு ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் […]

#Italy 5 Min Read
Henly Passport Index - India Ranking

அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புங்க..சீனாவிடம் கெஞ்சிய மாலத்தீவு அதிபர்..!

பிரதமர் மோடி கடந்த வாரம் லட்சத்தீவு சென்றபோது இங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடி பதிவிற்கு விமர்சித்து கருத்துக்களை தெரிவித்தனர். இதனால் மாலத்தீவு அமைச்சர் 3 பேர் தற்காலிக பதவி நீக்கம்செய்யப்பட்டனர்.  இருப்பினும் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதால் “மாலத்தீவு புறக்கணியுங்கள்” என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலானது. மேலும், மாலத்தீவுவிற்கு இந்தியர்களால் முன்பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் விமான டிக்கெட் ரத்து […]

BycottMaldives 6 Min Read

போதைப்பொருள் கடத்தல் மன்னனை காணவில்லை.. ஈக்வடாரில் வெடித்த கலவரம்.!

ஈக்வடார் நாட்டில் கைது செய்யப்பட்டு குவாயாகில் சிறையில் இருந்த பிரபல போதை பொருள் கடத்தல் தலைவன் அடோல்போ மசியாஸ் கடந்த ஞாயிற்று கிழமை காணாமல் போனார். இதனை தொடர்ந்து அடோல்போ மசியாஸ் இறந்துவிட்டதாக கருதி ஈக்வடார் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் உள்ள கைதிகள்  சிறையினுள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த போர்!! ஹிஸ்புல்லாவை எச்சரிக்கும் இஸ்ரேல்! நடந்தது என்ன? மேலும், ஈக்வடார் நாட்டின் வெளியிலும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இதனால் காவலர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். […]

ecuador 4 Min Read
TC Television network Guayaquil Ecuador

ஓரினச்சேர்க்கையாளரை பிரதமராக நியமித்த பிரான்ஸ் அதிபர்..!

பிரான்ஸில் அடுத்த ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கிடையில் பிரான்ஸ்  பிரதமராக இருந்த  எலிசபெத் போர்ன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவர் பிரதமராகி இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. அவர் கடந்த மே 2022 இல் பிரதமரானார்.அவர் பிரான்சின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார். அதைதொடர்ந்து, புதிய பிரதமர் யார் என்பது தொடர்பான […]

FrancePM 5 Min Read

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பான் நாட்டில் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்சு மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரின் மேற்கு கடற்கரை பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளது. இது ஜப்பானிய மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையும், […]

#Earthquake 4 Min Read
Japan earthquake

பிரதமர் மோடி பற்றிய அவதூறு.! மாலத்தீவு அதிபர் பதவி விலக அந்நாட்டு முக்கிய தலைவர் வலியுறுத்தல்.!

சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுகளுக்கு சென்று நேரம் செலவிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை இணையத்தில் பதிவிட்டு, லட்சத்தீவு, வெறும் தீவுகளின் கூட்டமல்ல. அது, காலம் காலமாக நீடித்துவரும் பாரம்பர்ய மரபு, மக்களுக்கான சான்று. கற்கவும், வளர்வதற்குமான வாய்ப்பாக என் பயணம் அமைந்தது என மகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார். இதனை குறிப்பிட்டு, மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டனர். மாலத்தீவை போல லட்சத்தீவை […]

Ali Azim 7 Min Read
PM Modi - Maldives Minority Leader Ali azim

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா..!

பிரான்ஸில் அடுத்த ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்பு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், பிரான்ஸ்  பிரதமர் எலிசபெத் போர்ன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பிரதமராகி இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. அவர் கடந்த மே 2022 இல் பிரதமரானார். அவர் பிரான்சின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இரண்டாவது […]

Elisabeth Borne 4 Min Read

அடுத்த போர்!! ஹிஸ்புல்லாவை எச்சரிக்கும் இஸ்ரேல்! நடந்தது என்ன?

லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா, வடக்கு இஸ்ரேலில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தளத்தைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேலிய இராணுவம் இந்த தாக்குதலை ஹிஸ்புல்லா சுட்டி காட்டி “மற்றொரு போர்” என எச்சரித்துள்ளது. சமீபத்தில், பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே பதற்றங்கள் அதிகமாகியுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கடந்த சனிக்கிழமையன்று மெரோன் மலையில் உள்ள தளத்தை தாக்கியதாக […]

#Hezbollah 4 Min Read
Israel warns Hezbo

பிரதமர் குறித்து அவதூறு கருத்து – மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் பதவி நீக்கம்..!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றார். அந்த பயணத்தின் போது பிரதமர் ஆழ்கடலில் நீச்சல் அடித்தும், கடற்கரையில் நடைபயணம் சென்றும் லட்சத்தீவின் அழகை ரசித்தார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில்” இயற்கை அழகுடன் லட்சத்தீவின் அமைதி மனம் மயங்க செய்கிறது. லட்சத்தீவு மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன். சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் […]

BycottMaldives 5 Min Read

வங்கதேசத்தில் 5-வது முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா..!

நமது அண்டை நாடான வங்காளதேசத்தில் மொத்தம் 350 நாடாளுமன்றத் தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கு அரசால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். இதனால் மீதமுள்ள 300 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற இருந்த நிலையில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அந்த ஒரு தொகுதிக்கான வாக்குப்பதிவு பின்னர் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நேற்று காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 42,000 க்கும் […]

#Bangladesh 6 Min Read

காங்கோ நாட்டில் பெருவெள்ளத்தால் 300க்கும் மேற்பட்டோர் பலி!

காங்கோ நாட்டின் கின்ஷாசாவில் பெய்த அதி கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெருவெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் 43,750 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, உடை, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வந்த பிஸ்டோரியஸ்..! இது குறித்து கின்ஷாசா அமைச்சர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

Congo 2 Min Read
Congo flood

10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வந்த பிஸ்டோரியஸ்..!

கடந்த 2013-ஆம் ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி ‘பிளேட் ரன்னர்’ என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க மாற்று திறனாளி தடகள வீரர் பிஸ்டோரியஸ் தனது சொந்த வீட்டிலேயே காதலி ரிவா ஸ்டீன்காம்பை சுட்டுக் கொன்றார். திருடன் என்று தவறாக நினைத்து தான் காதலி மீது துப்பாக்கியால் சுட்டதாக பிஸ்டோரியஸ் காவல்துறையிடம் கூறினார். இந்த கொலை சம்பவம் உலகையே அதிர வைத்தது. இந்த கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடந்த முதல் விசாரணையில் பிஸ்டோரியஸ் குற்றமற்ற கொலைக்குற்றவாளி என  […]

girlfriend murder 4 Min Read

முதல்முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி… ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் மக்கள்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாவட்டங்களில் ஜனவரி மாதம் நடைபெறும். அதன்படி, தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இதில்,  746 காளைகள் பங்கேற்றன. இந்த நிலையில், முதல் முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் […]

#Srilanka 4 Min Read
SriLanka Jallikattu

வங்க தேசத்தில் பரபரப்பு! பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு 5 பேர் பலி!

வங்கதேசத்தில் ஜெஸ்ஸோர் பகுதியில் இருந்து தலைநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த பெனபோலே எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்க தேசத்தின் வடக்கு நகரமான ஜெச்சூரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தலைநகர் தாகா நோக்கி வந்துகொண்டிருந்த போது திடீரென தீ பற்றி எரிந்தது. குறைந்தது நான்கு பெட்டிகளாவது தீ பிடித்து எரிந்தது. தீ விபத்து ஏற்பட்டதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு […]

#Bangladesh 4 Min Read
Bangladesh train fire

ஈரான் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு..!

ஈரானின் கெர்மான் நகரில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் , 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெனரல் காசிம் சுலேமானியின் நினைவு தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. 1979-ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு யாரும் […]

#Iran 4 Min Read