DHANISH - TRISHA [File Image]
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘கொடி’ திரைப்படம் இன்றுடன் வெளியாகி 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான ‘கொடி’ படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்க, நடிகைகள் த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகிய இருவரும் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தனர்.
மேலும் இந்த படத்தில், சரண்யா பொன்வண்ணன், எஸ்.ஏ.சந்திரசேகர், காளி வெங்கட், நமோ நாராயண, மற்றும் ஜி.மாரிமுத்து ஆகியோர் நடித்திருந்தனர். படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கவனிக்க, வெங்கடேஷ் எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கில் தர்மயோகி என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தில் நடித்த தனுஷ் மற்றும் த்ரிஷாவின் நடிப்புக்குப் பெரும்பாலான பாராட்டுக்கள் குவித்தனர். மேலும், இப்படம் 2018-ல் கன்னடத்தில் ‘த்வஜா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
#7YearsOfKaashmora : கவர்ச்சியில் விருந்து வைத்த நயன்தாரா! கார்த்திக்கு கை கொடுத்ததா ‘காஷ்மோரா’?
இந்த படுத்தில் நடிகர் தனுஷ் முழு அரசியல் வாதியாக நடித்திருப்பார். புதுப்பேட்டை படம் முதல் அரசியல் படமாக இருந்தாலும், முழு அரசியல்வாதியாக கொடி படத்தில் கலக்கி இருப்பார் நடிகர் தனுஷ். மேலும், படத்தில் காதலியாகவும், வில்லியாகவும் மிரட்டியிருப்பார் நடிகை த்ரிஷா.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக, படத்தில் நடித்த தனுஷ் மற்றும் த்ரிஷாவின் நடிப்புக்குப் பெரும்பாலானோர் பாராட்டுக்கள் குவித்தனர்.
கொடி பாக்ஸ் ஆபிஸ்
இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.32.35 கோடி வசூலித்தது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் ரூ.4.60 கோடியும், கர்நாடகா ரூ.2.10 மற்றும் கேரளாவில் ரூ.1.35 என வசூலை குவித்தது. ரூ.6.5 கோடி வசூலித்தது.
மேலும், வெளிநாடுகளில் மட்டும் ரூ.10.85 கோடி வசூல் செய்து அப்போவே சாதனை படைத்து. இந்நிலையில், உலகம் முழுவதும் இந்த திரைப்படம் மொத்தமாக ரூ.51.75 வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…