Taapsee Pannu [file image]
டாப்ஸி பன்னு : பிரபல நடிகையான டாப்ஸி பன்னு பெயர் சமீபகாலமாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதற்கு ஒரு காரணம் அவருடைய திருமணம் தான். அவர் தனது நீண்ட நாள் காதலர் மத்தியாஸ் போவை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். அதில் இருந்து அவருடைய பெயர் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில், தற்போது ரசிகர் செய்த செயலால் கடுப்பான வீடியோ ஒன்றும் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் மும்பையில் ஒரு படத்தின் பிரீமியர் ஷோ பார்ப்பதற்காக டாப்ஸி வருகை தந்தார். அப்போது படம் பார்த்துவிட்டு வெளிய வந்த நிலையில், வெளியே ரசிகர்கள் பலரும் கூட்டமாக நின்று கொண்டு டாப்ஸியுடன் செல்பி எடுக்க முயற்சி செய்தனர். ஆனால், டாப்ஸி செல்பி எடுக்காமல் வேகமாக காருக்குள் செல்ல முயற்சி செய்தார். எனவே, சிலர் டாப்ஸி சரியான மனநிலையில் இல்லை என்று அவருடைய உணர்வுக்கு மதிப்பளித்து விலகி சென்றார்கள்.
இருப்பினும், ஒரே ஒரு ரசிகர் மட்டும் டாப்ஸியை பின் தொடர்ந்து “மேடம் ஒரு செல்பி…மேடம் ஒரு செல்பி ” என்று கூறி சென்றார். டாப்ஸி காரில் ஏறும்போதும் கூட காரை திறக்கவிடாமல் வழியில் நின்று கொண்டு ப்ளீஸ் என ஒரு செல்பிக்கு கெஞ்சவும் செய்தார். ஒரு கட்டத்தில் கடுப்பான டாப்ஸி முதல தள்ளி போ என்பது போல கூறிவிட்டு காரில் ஏறி சென்றார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், நடிகை டாப்ஸி தற்போது ‘ஃபிர் ஆயா ஹசீன் தில்ருபா’ (Phir Aayi Haseen Dillruba) என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தற்போது டாப்ஸி பிசியாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…